ரஷ்யாவின் யுத்தம்: கேள்விக்குறியாக இலங்கை ஏற்றுமதி மட்டுமல்ல..இந்திய வம்சாவளி தமிழரின் எதிர்காலமும்!
கண்டி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தால் இலங்கை பொருளாதார ரீதியாக மேலும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் இந்திய வம்சாவளி தமிழரின் எதிர்காலமும் மிகப் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
இலங்கை முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சர்வதேச பொருளாதார அமைப்புகளிடம் பெற்ற கடன் ஒருபக்கம், சீனாவிடம் குறுகிய கால கடனாக பெற்றதை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம், கொரோனா கால பாதிப்புகள் என மொத்தமாக இலங்கையை நிர்மூலமாக்கி இருக்கிறது.

கை கொடுக்கும் இந்தியா
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிக மிக கடுமையாக உயர்ந்துள்ளன. இத்தகைய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இந்தியா கடனுதவிகளை வழங்கி கொண்டிருக்கிறது. மேலும் இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவின் யுத்தம்
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா திடீரென யுத்தம் தொடங்கி இருக்கிறது. உக்ரைனில் உள்ள ரஷ்ய தேசிய இனத்தவருக்கு ஆதரவாக இந்த யுத்தத்தை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. யுத்தத்தில் சிக்கியிருக்கும் ரஷ்யாவும் உக்ரைனும் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இலங்கை ஏற்றுமதி
இலங்கையின் முதன்மையான ஏற்றுமதி தேயிலை. 2-வது இலங்கைக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை. இலங்கை அதிகமாக தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா 3-வது இடத்தில் இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 29 மில்லியன் கிலோ தேயிலையை ரஷ்யாவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்கிறது. இந்த வரிசையில் உக்ரைன் 18-வது இடத்தில் இருக்கிறது. இப்போது இருநாடுகளும் யுத்தத்தில் மூழ்கியதால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.
Recommended Video

இந்திய வம்சாவளி தமிழர்கள்
ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததற்கான தொகையை இலங்கை பெறுவதற்கு நீண்டகாலம் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் இலங்கை தேயிலை தோட்டங்களை மட்டுமே நம்பி பல லட்சக்கணக்கில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? இந்த விவகாரத்தில் இந்தியாவின் உதவியை இலங்கை கேட்க முடியுமா? என்பதும் தெரியவில்லை என்கின்றனர் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications