சமையலறையில் விழுந்த ரஷ்ய ஏவுகணை.. மூட்டை முடிச்சியோட தலைத்தெறிக்க ஓடாமல் தலைக்கு தில்ல பாத்தீங்களா?
கிவ்: உக்ரைனில் வீட்டு சுவரை துளைத்துக் கொண்டு வெடிக்காத ஏவுகணை ஒன்று சமையலறைக்கு அருகே நின்றிருக்கும் நிலையில் அதன் அருகே சிறிதும் பயமின்றி ஒருவர் ஷேவ் செய்து கொண்டிருக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போரிட்டு வருகிறது. எனினும் உக்ரைன் அரசு ரஷ்யாவிடம் சரண்டர் ஆகாமல் தொடர்ந்து தீரத்துடன் போராடி வருகிறது.
உலக நாடுகள் பல கூறியும் ரஷ்யா போரிடுவதை நிறுத்தவே இல்லை. உக்ரைன் மீது உக்கிரமாக ரஷ்யா போரிட்டு வருகிறது.
பிரிக்ஸ்! உக்ரைன் போருக்கு இடையே சந்திக்கும் தலைகள்! இந்தியா, ரஷ்யா, சீனாவை கண்காணிக்கும் அமெரிக்கா
18 பேர் பலி
உக்ரைனின் மத்திய பகுதியான கிரிமென்சுக்கில் உள்ள ஷாப்பிங் மாலில் நடந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 18 பேர் பலியாகிவிட்டனர். இதுகுறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் உக்ரைன் அமைச்சர் ஒருவர் 21 பேர் இன்னமும் காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.
கண்டனம்
அந்த ஷாப்பிங் மாலில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது தீப்பிழம்புகள் எப்படி வருகின்றன என்பதுகுறித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவித்த காட்சிகளையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ மூலம் பதிவிட்டிருந்தார். இந்த தாக்குதலை உலக தலைவர்கள் போர் குற்றம் என கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video
கொடூர தாக்குதல்
கிரிமென்சுக்கில் நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து அலெக்சாண்டர் கோலோமியட் என்பவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆங்காங்கே ஏவுகணை சப்தம் கேட்டு வரும் நிலையில் கோலோமியட்டின் வீட்டிலும் ரஷ்யாவின் ஏவுகணை துளைத்துக் கொண்டு சமையலறையில் விழுந்தது.
ஷேவ்
நல்ல வேளை அந்த ஏவுகணை வெடிக்கவில்லை. பெரிய அளவு என்பதால் சாய்வாக நின்றுகொண்டிருக்கிறது. இன்னேரம் நாமாக இருந்திருந்தால் தலைத்தெறிக்க ஓடியிருப்போம். ஆனால் கோலோமியட்டோ எந்த பயமுமின்றி அந்த வெடிக்காத ஏவுகணைக்கு அருகேயே நின்று ஷேவ் செய்துக் கொண்டிருந்தார். இருந்தாலும் தலைக்கு இவ்ளோ தில் ஆகாது பாஸ்!