பச்சை படுகொலை முயற்சி.. உக்ரைன் அதிபருக்கு 3 முறை குறி வைத்ததா ரஷ்யா.. எப்படி தப்பித்தார்.. பகீர்
உக்ரைன் அதிபரை கொல்ல 3 முறை முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது
மாஸ்கோ: உக்ரைன் அதிபரை தாக்கி கொலை செய்ய, 3 முறை முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், உக்ரைன் அதிகாரிகள் அலர்ட்டாக செயல்பட்டதால் இந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.. காரணம், உக்ரைனைவிட ரஷ்யா ஆயுதப்படையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.. படை பலம் அதிகம்.
எனினும், உக்ரைனில் பெரும்பாலான ஆண்கள் ராணுவப்பயிற்சி பெற்றிருப்பதால், ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறார்கள்..

உக்ரைன்
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியானது.. ரஷ்யாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பானது, 400 பேரை உக்ரைனுக்கு அனுப்பி உள்ளதாகவும், இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது..

அதிபருக்கு குறி
இந்த 400 பேரும் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்து விட்டதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, உக்ரைன் அதிபரோடு சேர்த்து அவரது அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 23 பேரை கொல்வதற்கு ரஷ்யா உத்தரவிட்டதுடன், இதற்காகவே அவர்களுக்கு மிகப்பெரிய தொகையும் முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.. இதற்கெல்லாம் காரணம் ரஷ்ய அதிபர் புதின்தான் என்றும் கூறப்பட்டது..

பேச்சுவார்த்தை
அதாவது ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, இன்னொரு பக்கம் உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை அனுப்புவதா என்று காட்டமான கேள்விகளை தலைவர்கள் எழுப்பினார்கள்.. உக்ரைன் அதிபர் ஏற்கனவே தன்னை கொல்ல ரஷியா திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த செய்தி மேலும் பரபரப்பை கிளப்பியது.. அந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், இப்போது இன்னொரு செய்தி வெளியாகி உள்ளது.. அதாவது உக்ரைன் அதிபரை கொல்வதற்காக நடந்த 3 முயற்சிகளை, அந்த நாட்டு அதிகாரிகளே திறன்படி முறியடித்துள்ளார்களாம்.

கொலை முயற்சி
இந்த தகவலை தி டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.. அதாவது, உக்ரைன் அதிபரை கொலை செய்வதற்காக வாக்னர் குழுவானது, சிசின் போராளிகள் குழுவுடன் இணைந்து செயல்பட்டுள்ளது.. இவர்கள் அனைவருமே உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு வெவ்வேறு குழுக்கள் அனுப்பப்பட்டதாம்.. ஆனால், உக்ரைன் தாக்குதலை விரும்பாத ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை பிரிவின் அதிகாரிகளே, உக்ரைன் அதிகாரிகளுக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளனர்..

அலர்ட்
அதற்கு பிறகுதான் உக்ரைன் அதிகாரிகள் அலர்ட் ஆகி உள்ளனர்.. உடனடியாக கீவ் நகருக்கு பறந்துள்ளனர்.. அங்கு கடந்த சனிக்கிழமையன்று சிசின் குழுவை சேர்ந்தவர்களை சுட்டு தள்ளி உள்ளனர்.. மேலும் எங்கெல்லாம் வாக்னர் குழுவினரின் நடமாட்டம் தென்பட்டதோ, அங்கெல்லாம் அவர்களின் கொலை முயற்சிகளை முறியடித்து விட்டோம் என்று உக்ரைன் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எஸ்கேப்
இப்படி ஒரு கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்படுவதை அறிந்ததுமே, அதிபரை தாங்கள் பத்திரமாக அழைத்து செல்வதாக அமெரிக்கா தெரிவித்தும் அதற்கு தாங்கள் மறுத்துவிட்டு, கீவ் நகரிலேயே பாதுகாப்பாக தங்க வைத்தோம் என்று அவர் மேலும் சொல்கிறார்.. இந்த துணிச்சலான நடவடிக்கைதான் பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.. இதற்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் இதை பற்றி சொல்லும்போது, தைரியம், நேர்மை, சுதந்திரத்திற்கான அடையாளமாக ஜெலன்ஸ்கி திகழ்கிறார் என்றார்..

நான்தான் முதல் குறி
ஆனால், ரஷ்யாவின் முதல் குறியாக நான் தான் இருப்பேன் என்று தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த புதின் முன்வர வேண்டும் என்றும் உக்ரைன் சரணடைந்து விடும் என யாராவது நினைத்தால், அவர் உக்ரைனை பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கவில்லை என்றே அர்த்தம் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications