மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேச்சு விளம்பர உரையாகவே இருந்தது: தடதடக்கும் ருமேனிய மேயர்!
ருமேனியா: நான் தான் பேசுவேன் என்று கூறிய மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் பேச்சு, விளம்பர உரையாகவே இருந்தது என்று ருமேனிய மேயர் கூறியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வருவதால், அங்கிருக்கும் இந்திய மாணவர்களை அண்டை நாடுகள் வழியாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது இந்திய அரசு.
உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திர்களை ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்திய அரசு மீட்டு வருகிறது.

உக்ரைனில் இந்தியர்கள்
உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவம் படிப்பதற்காக இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு சென்றுள்ளார்கள். தற்போது உக்ரைனில் போர் நடப்பதால் அங்குள்ள மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.

விமானம்
உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இதில் இந்திய விமானப்படையும் பங்கெடுத்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஆபரேஷன் கங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்
இந்திய மாணவர்களுக்கு உதவிடவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வரும் பணியை ஒருங்கிணைக்கவும் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தற்போது ருமேனியாவில் இருக்கிறார்.

வாக்குவாதம்
ருமேனியாவில் இந்திய மாணவர்கள் ருமேனிய மேயர் தலைமையில் தங்கி இருந்தனர். அப்போது, அந்த இடத்துக்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சென்றார். அந்தநிலையில், மாணவர்களிடம் இந்தியா எப்போது திரும்புவார்கள் என ருமேனியா மேயர் பேசி வந்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நான் தான் பேசுவேன் என்றும், நான் என்ன பேசுவேன் என்று நான் தான் முடிவெடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

மேயர்
இதற்கு ருமேனிய மேயர், இந்த மாணவர்களை நான் தான் பாதுகாத்தேன். அவர்களுக்கு தேவையான உணவு, உடை அனைத்தையும் தந்தேன். நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது என்று பதிலளித்துள்ளார். இதற்கு இந்திய மாணவர்கள் கைதட்டி பாராட்டியுள்ளனர். ருமேனிய மேயரைப் பாராட்டி, இந்திய அமைச்சர் தலைகுனிந்ததுபோன்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
Recommended Video

விளக்கம்
இந்த நிலையில், ருமேனியாவின் ஸ்னாகோவ் பிராந்திய மேயர் இதுகுறித்து தற்போது பேசியிருக்கிறார். அதில், "போர் காரணமாக உக்ரைனிலிருந்து தப்பித்து 157 இந்திய மாணவர்கள் ஸ்னாகோவ் பிராந்தியத்துக்கு வந்தனர். ஸ்னாகோவ் பிராந்தியத்தின் குடிமக்களே அனைத்தையும் மாணவர்களுக்கு வழங்கினர். இந்த நிலையில், இந்திய அமைச்சர் அந்த அறைக்கு கேமராக்களுடன் வருகை தந்தார். அவர் மாணவர்களிடம் தனது விளம்பர உரையைத் தொடங்கினார். போர் பூமியை விட்டு வெளியேறி வீட்டிற்குச் செல்ல விரும்பிய மாணவர்களுக்கு ஆறுதலாக எந்த வார்த்தையும் கூறவில்லை.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications