"நாங்கள் உறுதியாக உள்ளோம்.. ஆனால்!" போர் தொடரும் நிலையில்.. உக்ரைன் பரபர கருத்து! முழு பின்னணி
கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடரும் நிலையில், பேச்சுவார்த்தை குறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர், ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போர் தொடங்கிய சமயத்தில் சில நாட்களில் போர் முடிவுக்கு வந்துவிடும் என்றே பலரும் கருதினர்.
இருப்பினும், யாரும் எதிர்பாராத வகையில் போர் பல நாட்களாகத் தொடர்கிறது. ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகப் போராடி வரும் நிலையில், பல பகுதிகளில் இரு நாடுகளுக்கு இடையே சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைன் போர்
போர் தொடரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி, ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் துருக்கி நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் இரு தரப்பு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் ராணுவம் அதற்குத் தந்து வரும் பதிலடியால் பல பகுதிகளில் ரஷ்யா ராணுவம் ஸ்தம்பித்துள்ளது.

பேச்சுவார்த்தை
ஒரு புறம் போர் தொடரும் சூழலிலும், மறுபுறம் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. இந்நிலையில், ரஷ்யா உடனான பேச்சுவார்த்தை மிகவும் கடினமானதாக உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அதேநேரம் போர் நிறுத்தத்தில் தனது நிபந்தனைகளை ஒருபோதும் வாபஸ் பெறப்போவது இல்லை என்றும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா உடன் நடைபெறும் பேச்சுவார்த்தை செயல்முறை மிகவும் கடினமாக உள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.

எங்களுக்கு தெரியாது
இது தொடர்பாக டிமிட்ரோ குலேபா மேலும் கூறுகையில், "பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் உக்ரைன் குழு தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எங்கள் கோரிக்கைகளை நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை. நாங்கள் முதலில் கேட்பது போர் நிறுத்தம் தான். பாதுகாப்பு உத்தரவாதங்கள், உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை குறித்தும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும், ரஷ்யாவுடன் முக்கிய விஷயங்களில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அடுத்து பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும் என எங்களுக்குத் தெரியாது. குறிப்பாக, உக்ரைன் நாட்டில் உக்ரைனிய மொழி மட்டுமே அரசின் அலுவல் மொழியாக இருக்கும். அதை மாற்றிக் கொள்ள முடியும்" என்றார்.

நேர்மாறான கருத்து
இருநாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாகத் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் சமீபத்தில் கூறி இருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக கருத்தை இப்போது உக்ரைன் அமைச்சர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை தொடர்பாகத் துருக்கியின் கருத்து உண்மையல்ல என்ற போதிலும், துருக்கியின் அரசியல் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காகவும், இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கும் நடவடிக்கைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
Recommended Video

குற்றச்சாட்டு
உக்ரைன் நாட்டில் ரஷ்ய மொழி பேசுபவர்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், ரஷ்யர்கள் குறி வைத்து இனப்படுகொலை செய்வதும் போரை ஆரம்பிக்க ஒரு காரணமாக ரஷ்யா குறிப்பிட்டு இருந்தது. இந்தச் சூழலில் தான் உக்ரைன் நாட்டின் அலுவல் மொழியாக உக்ரைன் மொழி மட்டுமே தொடரும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications