Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூமியில் பஞ்சம் அதிகமாக இருக்கும் இடம் 'காசா'.. ஐநா கவலை! பட்டிணியில் லட்சக்கணக்கான உயிர்கள்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக காசாவில் பஞ்சம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், உலகில் பஞ்சம் அதிகம் உள்ள இடம் காசா தான் என்று ஐநா மனித உரிமை அமைப்பு கூறியிருக்கிறது.

பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் காலங்காலமாக இருந்து வருகின்றன. இதற்கு முன்னர் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்புகளுக்கு ஆதராங்களும் இருக்கின்றன. இப்படியான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை பாலஸ்தீன மக்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் பல அமைப்புகளை உருவாக்கின. இவை தங்களை பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் என்று கூறிக்கொள்கின்றன. ஹமாஸும் இதில் ஒன்று.

Gaza UN Israel

இந்த அமைப்பு ஆயுதம் தாங்கிய போராட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. எனவே ஹமாஸை தீவிரவாத அமைப்பாக அமெரிக்க ஆதரவு நாடுகள் அடையாளப்படுத்தியுள்ளன.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இதில் 1300 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கு எதிராக இஸ்ரேல் தீவிரமான போரை மேற்கொண்டது. கடந்த 20 மாதங்களாக நடந்த வரும் இந்த போரில் சுமார் 53,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸை அழிப்பதுதான் நோக்கம் என்று இஸ்ரேல் ராணுவம் சொல்லிக்கொண்டாலும், இதில் பொதுமக்கள்தான் அதிக அளவில் உயிரிழந்தனர்.

எனவே போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தாலும் கூட, ஹார்வார்ட் போன்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அமெரிக்காவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தின. இதனையடுத்து போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவும் வலியுறுத்தியது. இப்படியான சூழலுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இதனை அடுத்தடுத்த கட்டத்திற்கு இஸ்ரேல் நகர்த்தவில்லை.

எனவே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு தற்போது மீண்டும் போர் நடந்து வருகிறது. முழு காசாவையும் கைப்பற்றுவதுதான் இஸ்ரேலின் நோக்கம் என்று, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொக்கரித்துள்ளார். இது அந்நாட்டு ராணுவத்தின் தாக்குதலில் எதிரொலித்திருக்கிறது. இந்த போர் காசாவில் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் இருந்து உணவு பொருட்கள் காசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், அதை இஸ்ரேல் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து வைத்திருக்கிறது. இதுதான் பஞ்சத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த சூழலில்தான் உலகில் மோசமான பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதி காசா என்று ஐநா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜென்ஸ் லார்கே, ஜெனிவாவில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதை கூறியுள்ளார். காசாவில் 100% மக்களும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+