இது மிகப்பெரிய குற்றம்.. காசா மீதான இஸ்ரேல் போரில் எண்ணெய் ஊற்றும் அமெரிக்கா.. கடுகடுத்த ஐநா
டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் போரை நீட்டித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவது மனிதாபிமான குற்றச் செயல் என ஐநா தலைவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது. போரை தடுக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் முன்மொழியப்படும்போது, அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும்.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவது மனிதாபிமான குற்றம் என ஐநா தலைவர்கள் விமர்சித்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்த ராணுவ ஆய்வாளரான சீன் பெல் சமீபத்தில் வெளியிட்டிருந்த சில தகவல்கள்தான், ஐநா தலைவர்களின் விமர்சனத்திற்கு முக்கிய காரணம். அதாவது, கடந்த ஆண்டு மட்டும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா சுமார் ரூ.7,500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்கியுள்ளதாக சீன் பெல் கூறியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸை அழிக்கும் வரை போர் ஓயாது என்று கூறியிருக்கிறார். அவருக்கு உதவும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை சப்ளை செய்து வருவது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
போர் காசா மக்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாலஸ்தீனத்திற்கு அண்டை நாடாக இருக்கும் எகிப்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் முக்கிய வருவாய் கடல்வழி வாணிபம்தான். ஆனால் போர் காரணமாக இது கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் அமெரிக்க டாலருக்கு நிகரான எகிப்து ரூபாயின் மதிப்பும் சரிந்துக்கொண்டே வருகிறது. மட்டுமல்லாது, எகிப்தின் ராஃபா எல்லையில், காசா மக்கள் அகதிகளாக குவிந்திருப்பதால் அவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் எகிப்து தலையில் வந்து விடிய இருக்கிறது.
அதேபோல இந்த போரில் ஈரானும் நுழைந்திருப்பதால், மத்திய தரைக்கடல் நாடுகள் முழுவதும் போரில் மறைமுகமாக பங்கெடுத்துள்ளன. இது சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நாடுகளையும் பாதிக்கும். எனவே போரை உடனடியாக நிறுத்த வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. இதற்கு அமெரிக்க ஒத்துழைக்க வேண்டும்.
பின்னணி: பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள்தான். இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications