இலங்கையின் போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம்! ஐ.நா அவகாசம் வழங்கியது
ஜெனிவா: போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க இலங்கைக்கு மேலும் 2 வருடங்கள் அவகாசம் வழங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. புதன்கிழமை இலங்கை தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்ட் ராட் அல் ஹுசைனால் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் முக்கியமானதொரு விஷயத்தை இலங்கையிடம் வலியுறுத்தியிருந்தார். அது இந்த விசாரணையில் பன்னாட்டு நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் புலனாய்வாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது.
ஆனால், அமெரிக்கா, பிரிட்டன், மொன்டெனெக்ரோ, மெசடோனியா ஆகிய நாடுகள் புதியதொரு தீர்மானத்தைத் தாக்கல் செய்தன
அந்த தீர்மானத்தில், விசாரணையை நிறைவேற்ற மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வேண்டும், கலப்பு விசாரணை (பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணை) என்பதற்குப் பதில் இலங்கை அரசின் சம்மதத்துடனான விசாரணையாகத்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்திற்கு 40 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கானா நாடு மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே விசாரணை நடத்த மேலும் 2 ஆண்டுகள் இலங்கைக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா இந்த தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் போன்றோர் கோரிக்கைவிடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications