ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜனநாயக நாடுகள் இடம்பெற வேண்டும்... ஜி-4 மாநாட்டில் மோடி வலியுறுத்தல்
நியூயார்க் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இடம்பெற வேண்டும் என்று ஜி-4 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை குறிப்பிட்ட கால வரையறைக்குள் விரிவுப்படுத்த வேண்டும் எனவும் ஜி-4 மாநாடு வலியுறுத்தியுள்ளது.

நியூயார்க்கில் இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் தில்மா ரூசெப், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலினா மார்க்கெல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், ஐ.நா.பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக மேற்கொள்ள வேண்டிய அணுமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா உள்ளிட்ட அமைதிக்கு பாடுபடும் ஜனநாயக நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்றும், அதற்கான முயற்சியின் தொடக்கமாக இக்கூட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இதில் உறுதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து சட்டப்பூர்வமான மற்றும் ஆக்கப்பூர்வமான அமைப்பாக செயல்படுத்துவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறும் விவகாரத்தில் மிக அழுத்தமாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதாகவும் ஜி 4 நாடுகள் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா.பாதுகாப்பு அவையில் தற்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பை விரிவுப்படுத்தி, நிரந்தர உறுப்பினராக ஆவதற்கு இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய 4 நாடுகள் முயற்சித்து வருகின்றன.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications