ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜனநாயக நாடுகள் இடம்பெற வேண்டும்... ஜி-4 மாநாட்டில் மோடி வலியுறுத்தல்
நியூயார்க் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இடம்பெற வேண்டும் என்று ஜி-4 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை குறிப்பிட்ட கால வரையறைக்குள் விரிவுப்படுத்த வேண்டும் எனவும் ஜி-4 மாநாடு வலியுறுத்தியுள்ளது.

நியூயார்க்கில் இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் தில்மா ரூசெப், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலினா மார்க்கெல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், ஐ.நா.பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக மேற்கொள்ள வேண்டிய அணுமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா உள்ளிட்ட அமைதிக்கு பாடுபடும் ஜனநாயக நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்றும், அதற்கான முயற்சியின் தொடக்கமாக இக்கூட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இதில் உறுதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து சட்டப்பூர்வமான மற்றும் ஆக்கப்பூர்வமான அமைப்பாக செயல்படுத்துவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறும் விவகாரத்தில் மிக அழுத்தமாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதாகவும் ஜி 4 நாடுகள் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா.பாதுகாப்பு அவையில் தற்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பை விரிவுப்படுத்தி, நிரந்தர உறுப்பினராக ஆவதற்கு இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய 4 நாடுகள் முயற்சித்து வருகின்றன.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications