இத்தாலி வீரர்கள் மீதான வழக்கு... இந்தியா விசாரிக்க உரிமை உள்ளதாக ஐ.நா. தீர்ப்பாயம் உத்தரவு
ஹம்பர்க்: மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் இரு இத்தாலி வீரர்கள் மீதான வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இதில் இந்தியாவிற்கு சாதகமான தீர்பபு வெளியானது.
2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரு மீனவர்களை கொச்சி கடல் பகுதியில் என்ட்ரிகா லெக்ஸி கப்பலில் வந்த இத்தாலி வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

இந்த வழக்கில் இத்தாலி மாலுமிகள் மிஸிமிலினோ ரதோர், சல்வதார் ஜிரோம் ஆகியோர் மீதான விசாரணை ஜெர்மனியின் ஹம்பர் நகரில் உள்ள ஐ.நா. சர்வதேச தீர்ப்பாயத்தில் நேற்று நடைபெற்றது. இந்தியா தரப்பில், கடல் கொள்ளையர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் உரிமையில்லை என இத்தாலி சார்பில் வாதிடப்பட்டு, குற்ற வழக்கிற்கு தடை விதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி இத்தாலி வீரர்களுக்கு தண்டனை அளிக்க இந்தியாவிற்கு அடிப்படை உரிமை உள்ளது என்றும், இந்த வழக்கில் இந்தியாவிற்கு விசாரணை அதிகார வரையறை உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மீனவர்களை எச்சரிக்காமல், ஆயுதங்களை பிரயோகித்துள்ளதால், இத்தாலியின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் நீதிபதி கூறினார். மேலும் இத்தாலி வீரர்கள் மீதான தண்டனை குறித்த விவரங்களை இந்தியாவே தீர்மானிக்கும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து வழக்குகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. இருநாடுகளும் தங்களது முதல் விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 24 ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications