தெற்கு சூடானில் ராணுவப் புரட்சி முறியடிப்பு: 500 பேர் பலி
ஜூபா: தெற்குசூடானில் அதிபருக்கு எதிரான ராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த புரட்சியின் போது 500 பேர்வரை கொல்லப்பட்டதாக ஐக்கியநாடுகள் சபை அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் தலைநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது. முன்னாள் துணை அதிபர் ரியக் மானசரின் ஆதரவு ராணுவ வீரர்கள் இதில் ஈடுபட்டனர். ராணுவ புரட்சியின் போது சுமார் 20 ஆயிரம் பேர் ஜுபாவில் உள்ள ஐ.நா.வளாகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அதிபர் சால்வா கீருக்கு எதிராக நடந்த இந்த புரட்சி 2 நாட்களில் முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புரட்சியில் ஈடுபட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் கோஸ்டி மானிப், முன்னாள் நீதித்துறை மந்திரி ஜான் லக் ஜோக், முன்னாள் உள்துறை அமைச்சர் ஜியர் சங் அலங் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகர் ஜுயாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராணுவ புரட்சியின் போது 400 முதல் 500 பேர் வரை பலியாகி இருப்பதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள 54 வது நாடான தெற்கு சூடான் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி தனி நாடாக உதயமானது. எண்ணெய் வளம் உள்ள நாடாக இருந்தாலும் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கின்றனர் தெற்கு சூடான் நாட்டு மக்கள். இதனிடையே அதிபருக்கு எதிரான புரட்சிகள் வேறு மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications