Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிரியாவில் ‘சம்பவம்’ செய்த அமெரிக்கா.. வான்வழி தாக்குதலில் 37 பயங்கரவாதிகள் பலி!

Subscribe to Oneindia Tamil

டமாஸ்கஸ்: சிரியாவில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் இந்த மாதம் நடத்திய வான்வழி தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

US airstrikes kills 37 militants affliated with extremist groups in syria

இந்நிலையில், வடமேற்கு சிரியாவில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க இராணுவம், சிரியாவில் இந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 37 பயங்கரவாதிகளை கொன்றதாக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அறிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவம் செப்டம்பர் மாத தொடக்கம் முதல் சிரியாவில் தாக்குதலை மேற்கொண்டனர். அதில், செப்டம்பர் 16 ஆம் தேதி மத்திய சிரியாவில் உள்ள ஒரு ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி முகாம் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தினர். அந்த தாக்குதலில் நான்கு சிரிய பயங்கரவாத குழு தலைவர்கள் உட்பட 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஐஎஸ்ஐஎஸ் மற்றும் சிரியாவை தளமாகக் கொண்ட ஹுராஸ் அல்-தின் என்ற அல் கொய்தாவின் துணை அமைப்பின் பல மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் இறந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா இதுகுறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், தாக்குதல்கள் செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 24 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வான்வழித் தாக்குதல் அமெரிக்காவுக்கும், நமது கூட்டாளிகளுக்கும் நலன் பயக்கும். நமக்கும் நமது கூட்டாளிகளுக்கும் எதிராக செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் திறனை சீர்குலைக்கும் என்று அமெரிக்க இராணுவ அறிக்கை தெரிவிக்கிறது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டில் ஈராக் மற்றும் சிரியாவில் பெரும் பகுதியை கைப்பற்றியது. சிரியாவில் மீண்டும் இதுபோன்று நடைபெறாமல் தடுக்க, அங்கு சுமார் 900 அமெரிக்க வீரர்கள் உள்ளனனர். மேலும் அதிக எண்ணிக்கையிலான ஒப்பந்த ராணுவ வீரர்களும் உள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க இந்த ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+