ஈழப் போர்: பிரபாகரனை உயிருடன் மீட்க முயன்றதா அமெரிக்கா?.. பரபரப்பு தகவல்
இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை மீட்க அமெரிக்கா முயற்சித்ததா? என்பது தொடர்பாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்: இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை மீட்க அமெரிக்கா முயற்சித்ததா? என்பது குறித்து இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதர்கள், இலங்கையைச் சேர்ந்த அமெரிர்க்கள் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் ராபர்ட் பிளேக் பேசியதாவது:

இந்தியாவுடன் இணைந்து
இறுதி யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் திட்டம் இருந்தது. இந்தியா, இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா இத்திட்டத்தை செயல்படுத்த இருந்தது.

பிணைக்கைதி மிரட்டல்
ஆனால் இலங்கை அரசோ, என்னையும் நார்வே தூதராக இருந்த எரிக் சொல்ஹொய்மையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைப்பார்கள். ஆகையால் இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என சாகடித்துவிட்டது.

புலிகள் செய்யமாட்டார்கள்
எங்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் அப்படி எங்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைப்பார்கள் என நம்பவே இல்லை. ஆனால் இலங்கை அரசு இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்தது.

பிரபாகரனை மீட்க முயற்சியா?
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை மீட்கின்றன முயற்சியாகவும் இலங்கை கருதியிருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் கடற்படை படகுகள் மூலம் மக்களை மீட்டு இலங்கையின் கட்டுப்பாட்டு பகுடிக்குள் கொண்டு செல்லவே திட்டமிட்டிருந்தோம்.

அமெரிக்காவின் எண்ணம்
விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்யும் எண்ணம் அமெரிக்காவுக்கு இருந்தது இல்லை. இலங்கை அரசுதான் அப்படி நினைத்துக் கொண்டது. இவ்வாறு ராபர்ட் பிளேக் கூறினார்.

சிவசங்கர் மேனன் கருத்து
அண்மையில் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலர் சிவசங்கர் மேனன் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனைக் காப்பற்ற அமெரிக்காவும் நார்வேயும் முயற்சித்தது. ஆனால் இந்தியா கடுமையாக எதிர்த்தது. இதனைத் தமிழக தலைவர்களும் கூட ஆதரித்தனர் என தம்முடைய புத்தகத்தில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications