இந்தியாவில் பெரும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்! தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா வார்னிங்
வாஷிங்டன்: தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற கூடும் என்பதால், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி, அமெரிக்க அரசு எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில், அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் படைகள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக அமெரிக்க குடிமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், இதுகுறித்து ஒரு எச்சரிக்கை தகவலை அது வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

ஆசியா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள அமெரிக்க மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்தியாவை பொறுத்தளவில், இந்தியன் முஜாகிதீன், ஹர்கட்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி, ஜெய்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்கள், எந்த நேரத்திலும் பெரும் தாக்குதலை நடத்தலாம்.
அமெரிக்கர்கள் தங்கும் பெரிய நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், கடற்கரைகள், ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இத்தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களை இலக்காக வைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறலாம். எனவே அமெரிக்க மக்கள் எச்சரிக்கையாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications