பாலியல் சீண்டல்.. குமுறும் பெண்கள்.. டொனால்ட் ட்ரம்புக்கு 100க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் நெருக்கடி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் 100க்கும் மேற்பட்ட எம்.பிக்கள், இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளனர்.
இதனால் ட்ரம்புக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி அதிகரித்துள்ளது.

பல பெண்கள்
நாடாளுமன்ற மேற்பார்வை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது இவர்கள் கோரிக்கை. குறைந்தபட்சம் 17 பெண்களாவது ட்ரம்ப் மீது பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

நல்ல நேரம்
ஜனநாயக கட்சியை சேர்ந்த புளோரிடாவை சேர்ந்த எம்.பியும், பெண்கள் பணிக்குழு தலைவருமான லோயிஸ் பிரான்கென் கூறுகையில், இதுதான் உண்மையை வெளியே கொண்டுவர நல்ல தருணம் என்றார்.

100க்கும் மேல்
பிரான்கென் மேலும் கூறுகையில், அதிபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு உள்ள எம்.பிக்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

யாராக இருந்தாலும்
பாலியல் துன்புறுத்தலை ஹாலிவுட் தயாரிப்பாளரோ, ரெஸ்டாரண்ட் சமையல்காரரோ, அல்லது அதிபரோ யார் செய்தாலும் பொறுக்க முடியாது என்றும் அவர் கூறினார். அதேநேரம் இந்த குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications