அமெரிக்க வெளியுறவு கொள்கையின் இன்னொரு தோல்வி.. ஹவுதிகளை ஒடுக்க முடியவில்லை!
துபாய்: யேமனில் ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் குண்டு வீச்சு தாக்குதல்கள் தோல்வியில் முடிந்துள்ளது. ஹவுதிகள் இந்தத் தாக்குதல்களைத் தாக்குப்பிடித்ததோடு, இஸ்ரேலிய பிராந்தியத்திற்குள் ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது.
ஹவுதி அமைப்பினர், 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலில் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட்டனர். இதன் விளைவாக, இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தாக்குவதற்காக அனுப்பி வைத்தனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலிய விமானப்படை யேமனின் ஹோடெய்டா துறைமுகத்தைத் தாக்கியுள்ளது. இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல், செங்கடல் பகுதியில் பதற்றம் அதிகரிப்பதற்கும், முழு அளவிலான மோதலுக்கு வழிவகுப்பதற்கும் வாய்ப்புள்ளது.

ஹவுதிகளின் வெற்றி: ஜூலை 19ம் தேதி இஸ்ரேல் பிராந்தியத்தின் உள்ளே ஹவுதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதல்கள் ஹவுதிகளுக்கு அடையாள வெற்றியாகக் கருதப்படுகிறது. இதன் மூலம், ஹவுதிகளின் பலமும், அரசியல் செல்வாக்கும் உள்நாட்டிலும், பிராந்திய ரீதியாக உயர்ந்து வருகிறது.
அமெரிக்காவின் தோல்விகள்: ஹவுதிகளுக்கு எதிரான ஏழு மாத கால அமெரிக்க தலைமையிலான நடவடிக்கை பெரும் பொருட் செலவை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் எந்தப் பலனையும் தரவில்லை. இந்தத் தாக்குதல்களால் ஹவுதி தரப்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மேலும், செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் நடத்திய தாக்குதல்கள் எதுவும் ஹவுதிகளை முடக்கி நிறுத்தவில்லை. இதனால், செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கப்பல் கட்டணம்தான் தாறுமாறாக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூட இந்த தாக்குதல்கள் பயனற்றவை என்று ஒப்புக் கொண்டார். ஆனால், அவர் இந்த தாக்குதல்களை நிறுத்த மறுத்துவிட்டார்.
அமைதிக்கு ஆபத்து: ஹவுதி அமைப்பினரின் தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் தோல்விகள், மத்திய கிழக்கு பகுதியில் ஒரு பெரிய போரை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படாவிட்டால், இந்த பிராந்தியத்தில் நீண்ட காலமாக அமைதி நிலவ வாய்ப்பில்லை.
இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதல்: இதையெல்லாம் சுட்டிக்காட்டியுள்ள அல்ஜசீரா ஊடக கட்டுரை, ஹவுதிகள் தங்கள் தாக்குதல்களை நிறுத்த ஒரே வழி, இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதே என அறிவுறுத்துகிறது. ஆனால், அமெரிக்கா அதைச் செய்யத் தவறிவிட்டது. பைடன் நிர்வாகத்தின் மற்றொரு தோல்வி இதுவாகும் என்கிறது அந்த கட்டுரை.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு -
மனசாட்சி இடம் கொடுக்கல.. ஈரான் போரால் டிரம்புக்கு எகிறும் பிரஷர்.. அமெரிக்க டாப் அதிகாரி ரஜினாமா -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
"இனி அமெரிக்காவுக்கு நேட்டோ தேவையில்லை.." கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென ஆவேசமாக பாய்ந்தார் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி!












Click it and Unblock the Notifications