அமெரிக்காவில் கணக்கு ஆசிரியையை அடித்துக் கொன்ற 14 வயது மாணவர்

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலம் எஸ்ஸெக்ஸ் கவுன்ட்டியில் உள்ள டான்வர்ஸில் இருக்கும் உயர் நிலைப்பள்ளியில் கணக்கு ஆசிரியையாக இருந்தவர் கொலீன் ரிட்ஸர்(24). அவர் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை. மேலும் செல்போனில் அழைத்தால் எடுத்து பேசவும் இல்லை. இதையடுத்து அவரை காணவில்லை என்று டான்வர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
முன்னதாக அந்த பள்ளியில் படிக்கும் பிலிப் சிஸ்ம்(14) என்ற மாணவனை காணவில்லை என்று நேற்று மாலை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பிலிப்பை காணவில்லை என்று ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டு அவரை யாராவது பார்த்தால் தங்களுக்கு தகவல் கொடுக்குமாறு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் டான்வர்ஸ் அருகில் உள்ள டாப்ஸ்ஃபீல்டில் பிசியாக இருக்கும் சாலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு பிலிப் நடந்து செல்வதை போலீசார் பார்த்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் ரத்தக் கறை படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பள்ளிக்கு பின்னால் இருக்கும் காட்டுப் பகுதியில் கொலீன் பிணமாகக் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனை விசாரித்து போலீசார் அவரை கைது செய்தனர்.
பிலிப் கொலீனை அடித்துக் கொலை செய்துள்ளார். சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications