'கார்கிலில் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து பாகிஸ்தானை வெளியேறச் சொன்னது யு.எஸ்.தான்'
இஸ்லாமாபாத்: கார்கில் போரின் போது பாகிஸ்தான் ஆக்கிரமித்த இடங்களில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்காதான் சொன்னதாக அந்நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றிய ரியாஸ் கோகர் தெரிவித்துள்ளார்.
கார்கில் போர் தொடர்பான ஆய்வுக் கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கார்கில் போரின்போது அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றிய ரியாஸ் கோகர், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுச் செயலர் தாரிக் உஸ்மான் ஹைதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ரியாஸ் கோகர் பேசியதாவது:
கார்கில் போர் தவிர்த்திருக்க கூடியதுதான். அப்போது என்னை அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் அழைத்தனர். இந்தியா, ஒரு பைத்தியம் போல சுற்றிக்கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் ஆக்கிரமித்த இடங்களில் இருந்து தயவுசெய்து உடனடியாக வெளியேறுங்கள் என்று கூறினர்.
அதனால்தான் பாகிஸ்தான் படைகள் கார்கில் பகுதியைவிட்டு வெளியேறின. பாகிஸ்தானால், ஒரு நம்பகமான விளக்கத்தை அமெரிக்காவிடம் அளிக்க இயலவில்லை. அதுதான் பாகிஸ்தான் இழைத்த மிகப்பெரிய தவறு. அதனால் நாங்கள் பொறுப்பற்ற நாடாக பார்க்கப்பட்டோம். நிச்சயமாக அந்த போர் தவிர்க்கப்படக் கூடிய ஒன்றுதான்.
இவ்வாறு ரியாஸ் கோகர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பலரும் கார்கில் போரை தவிர்த்திருக்கலாம் என்றே கருத்து தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications