ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்!
உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்திலும், சர்வதேசப் கப்பல் போக்குவரத்திலும் மிக முக்கிய வழித்தடமாக விளங்குவது ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) தான். ஈரான் மீதான போர் துவங்கிய பின்பு, இந்த வழியைக் கட்டுப்படுத்துவது யார் என்ற அதிகாரப் போட்டி அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளரான பீட் ஹெக்செத் (Pete Hegseth) அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் மூலம் இதுவரை என்ன சாதித்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் கடுமையான பொருளாதார முடக்கம் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தற்போது தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக பீட் ஹெக்செத் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானை வீழ்த்திய 'புராஜெக்ட் ஃப்ரீடம்'!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பாவில் உள்ள அமெரிக்க மத்திய ராணுவத் தலைமையகத்திற்கு (US Central Command) வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்செத், மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள போர் அச்சத்தில் அமெரிக்கப் படைகள் வெறும் எதிர் தாக்குதலை மட்டும் நடத்தவில்லை என்றும், ஹார்முஸ் வழித்தடத்தை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவுக்கு சாதகமாக மாற்றி அமைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்காக அமெரிக்கா 'புராஜெக்ட் ஃப்ரீடம்' (Project Freedom) என்ற பெயரில் ரகசிய மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஈரானின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் தடையற்ற போக்குவரத்தை அமெரிக்கா தொடர்ந்து உறுதி செய்து வருகிறது.
நள்ளிரவு நேரங்களில் கூட ஈரானியப் படைகளால் பார்க்கவோ அல்லது தடுக்கவோ முடியாத அளவிற்கு அதிநவீன பாதுகாப்பு வளையத்தை அமெரிக்கா அமைத்துள்ளது.
இதன் மூலம் இதுவரை 100 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் இதர வணிகப் பொருட்கள் இந்த வழித்தடத்தின் வழியே எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
140 கப்பல்கள் முடக்கம்
மேலும் ஈரான் தனது துறைமுகங்கள் வழியாக செய்யும் கடல்வழி வணிகத்தைக் முழுமையாக கட்டுப்படுத்த அமெரிக்கா விதித்துள்ள முற்றுகை (Blockade) மிகவும் பலமாக உள்ளதாகப் பீட் ஹெக்செத் தெரிவித்தார். அமெரிக்க ராணுவத்தின் இந்த நடவடிக்கையின் காரணமாக, ஈரான் துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்க முயன்ற சுமார் 140 வணிகக் கப்பல்கள் இதுவரை அமெரிக்கப் படைகளால் வெற்றிகரமாக முடக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, நேற்று கூட சர்வதேச தடைகளை மீறி ஈரானில் இருந்து வெளியேற முயன்ற ஒரு பிரம்மாண்ட கச்சா எண்ணெய் டாங்கர் கப்பலை (Oil Tanker) அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள் முழுமையாகச் செயலிழக்கச் செய்துள்ளன.
ஈரானுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களின் சொத்துக்கள் மற்றும் தளங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், இந்த முற்றுகை நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டொனால்ட் டிரம்ப் சொன்னது 100 சதவீதம் உண்மை!
ஹார்முஸ் வழித்தடத்தின் கள நிலவரம் குறித்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், "எங்கள் ராணுவ முற்றுகை மிகவும் வலுவாக இருக்கும் பட்சத்திலும், எங்களால் சர்வதேச வணிகக் கப்பல்களை எவ்வித தடையுமின்றி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இயக்க முடிகிறது என்ற நிலையில், இந்த ஒட்டுமொத்தப் பாதையையும் கட்டுப்படுத்துவது யார் என்ற கேள்விக்கே இடமில்லை. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தான் முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பது தான் நிதர்சனம்" என்று அழுத்தமாகக் கூறினார்.
அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து வாரக் கணக்கில் இந்த பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை வெற்றிகரமாகக் கையாண்டு வருவதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள ஈரான் மறுத்தாலும் இதுதான் தற்போதைய உண்மையான கள நிலவரம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
உலகளாவிய கச்சா எண்ணெயில் பெரும்பகுதி இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுவதால், அங்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் இந்த ராணுவப் பதற்றங்கள் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி, இந்தியாவின் ரீடைல் எரிபொருள் விலையையும், சாமானியர்களின் மாதாந்திர பட்ஜெட்டையும் நேரடியாகப் பாதித்து வருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications