பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தை... வீடியோ எடுத்து போலீஸிடம் பிடித்துக் கொடுத்த மகள்
ஜலூன்: உத்திர பிரதேசத்தில் பெற்ற தகப்பனே தன்னை பலாத்காரம் செய்த நிலையிலும் அதனை மகள் படம் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்து அவரை சிறையில் தள்ளியுள்ளார்.
கடந்த 4 வருடங்களாக அப்பெண்ணின் தந்தை அவரை பலாத்காரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தந்தையின் கொடுமை தாங்காமல் அப்பெண் தனது நண்பரின் துணையுடன் இதனை படம் பிடித்துள்ளார்.
"என் தந்தை கடந்த 4 வருடங்களாக எனக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைக் கொடுத்து வந்தார். ஒவ்வொரு முறை நான் என் அம்மாவிடம் சொல்லும்போதும் அவர் அதை நம்புவதற்கு தயாராக இல்லை. அதனால் அவருக்கு புரிய வைத்தால்தான் இதிலிருந்து தப்ப முடியும் என்றே நான் இந்த முடிவை எடுத்தேன். என் தந்தை தண்டிக்கப்பட வேண்டும்" என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வேகமாக செயல்பட்ட போலீசார் அவரது தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். "நர்சிங் படித்து வருகின்ற அப்பெண் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார். அந்த வீடியோவை அடுத்து அப்பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்று காவல்துறை அதிகாரி அலோக் சக்ஷேனா தெரிவித்துள்ளார்.