மஸ்கட்டில் 'வள்ளுவமாலை - 100': நூல் அறிமுகக் கூட்டம்
மஸ்கட்: தமிழ் ஆர்வலர் சுரேஜமீ எழுதிய 'வள்ளுவமாலை-100' நூல் அறிமுகக் கூட்டம் கடந்த 7ம் தேதி மஸ்கட்டில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 9 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் சிறப்புப் பிரார்த்தனையோடு தொடங்கியது.

இதில் சிறப்பு விருந்தினராக மஸ்கட் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவரும், இன்னாள் ஆலோசகருமான திருவாளர். ஜானகிராமன், மஸ்கட் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. அபு ஹசன், பொருளாளர் திருமதி.விஜயலட்சுமி, இலக்கிய அணிச் செயலாளர் திருமதி.விசாலம் மற்றும் திருக்குறள் தென்றல். தங்கமணி, சுவாமிநாதன், சந்திரசேகர், கலைமணி மற்றும் இலக்கியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நூறு வெண்பாக்கள் கொண்ட வள்ளுவமாலையை அன்பர்களுக்கு வாசித்துக் காட்டி அதன் சிறப்புக்களையும், நூல் பிறந்த கதையையும் நூலாசிரியர் விளக்கினார். விருந்தினர்கள் வள்ளுவமாலை விளக்கும் திருக்குறள் மாண்பினைப் போற்றி ஆசிரியருக்கு தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அமீரகக் கவிஞர் 'வாழும் கண்ணதாசன்' காவிரிமைந்தன் அவர்களின் வாழ்த்துக் கவிதையும் வாசிக்கப்பட்டது. நூல் வெளியீட்டுக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். வல்லமை மின்னிதழில் இது வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
முடிவில் திருக்குறள் தென்றல். தங்கமணி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ் ஆர்வலர் சுரேஜமீயின் மனைவி ரேவதி சுந்தர் மற்றும் இரட்டை மகள்களான ஜனனி, மீரா செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications