For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாடிகன் முக்கிய நிர்வாகி மீது சிறுவர்கள், ஆண்கள் பாலியல் புகார்.. ஆஸ்திரேலிய போலீஸ் விசாரணை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சிட்னி: வாடிகனில் பணியாற்றும் ஆஸ்திரேலிய கார்டினல் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆஸி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்லாரட் நகரை சேர்ந்தவர் கார்டினல் ஜார்ஜ் பெல் (75). இவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடமான வாடிகனில் கருவூலம் பராமரிக்கும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்.

1970 முதல் 1990 வரையிலான கால கட்டங்களில் இவர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளன.

சிறுவர்கள்

சிறுவர்கள்

குறிப்பாக சிறுவர்களையும், ஆண்களையும் இவர் பாலியல் வேட்கைக்கு பயன்படுத்தியதாக பரபரப்பு சர்ச்சை எழுந்துள்ளது.

ஆண்கள் குற்றச்சாட்டு

தற்போது 40 வயதைக் கடந்து விட்ட இரு ஆண்கள், ஜார்ஜ் பெல் 1970ம் ஆண்டுவாக்கில் தங்களை தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்தபோது தவறாக நடந்து கொண்டதாகவும், முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் புகார் கூறி உள்ளனர்.

ஆடையின்றி

இதேபோல 3 சிறுவர்கள் முன்பாக கார்டினல் ஜார்ஜ் பெல் ஆடையின்றி நின்று கொண்டிருந்ததாக ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார். ஆலய பாடகர் குழுவில் உள்ள 2 இளைஞர்களும் ஜார்ஜ் பெல் மீது செக்ஸ் புகார் கூறி உள்ளனர்.

மறுப்பு

அதேநேரம், இந்த குற்றச்சாட்டுகளை கார்டினல் ஜார்ஜ் பெல் மறுத்துள்ளார். இது அதிர்ச்சி தரும் அவதூறு பிரசாரம் என அவர் கூறி உள்ளார்.

விசாரணை

விசாரணை

ஜார்ஜ் பெல் மறுத்துள்ள போதிலும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஓராண்டு காலத்துக்கும் மேலாக விசாரணை நடந்துகொண்டிருப்பதாக விக்டோரியா மாகாண போலீஸ் கமிஷனர் கிரஹாம் ஆஸ்டன் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
A Vatican treasurer is being investigated in relation to multiple allegations of child abuse in his home country of Australia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X