10,000 அடி உயரத்தில் பறக்கையில் திறந்த விமானத்தின் கதவு: புல்லரிக்க வைக்கும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

செபு: பிலிப்பைன்ஸில் இருந்து இருந்து தென் கொரியாவுக்கு சென்ற விமானம் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கையில் கதவு திறந்திருந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிலிப்பைன்ஸின் செபு நகரில் இருந்து ஜின் ஏர் விமானம் ஒன்று 163 பயணிகளுடன் தென் கொரியாவில் உள்ள பூசனுக்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய வேகத்தில் அதன் அவசரகால கதவு திறந்திருந்தது தெரிய வந்தது. அந்த வழியாக காற்று வேகமாக விமானத்திற்குள் வந்ததால் பயணிகள் அல்லல்பட்டனர்.

இதனால் விமானம் கிளம்பிய 30 நிமிடங்களில் மீண்டும் செபுவுக்கே திரும்பி வந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தென் கொரியாவை சேர்ந்த பயணி கிம் ஜின் பே கூறுகையில்,

கதவு திறந்து அந்த வழியாக வந்த காற்றின் அழுத்தத்தால் பயங்கரமாக தலை வலித்தது. நான் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஒரு விரல் செல்லும் அளவுக்கு கதவு திறந்திருந்தது என்றார்.

காற்றின் அழுத்தத்தால் பெரியவர்களின் காதுகளே பயங்கரமாக வலித்தது. அப்படி இருக்கையில் குழந்தைகளுக்கு எப்படி இருந்திருக்கும்? என்றார் மற்றொரு பயணியான லீ சாங் க்யூ.

விமானம் 10 ஆயிரம் அடியில் பறக்கையில் கதவு திறந்திருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+