டிரம்பின் மாஸ்டர் மூவ்.. முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்? உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குட்நியூஸ்
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடங்கி 3வது ஆண்டு நிறைவடைய உள்ளது. போர் நிறுத்தம் என்பது இன்னும் சாத்தியமாகவில்லை. இந்நிலையில்தான் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே எல்லை பிரச்சனை இருந்தது. இதற்கிடையே தான் ரஷ்யாவை சமாளிக்கும் நோக்கத்தில் உக்ரைன் நேட்டோ நாடுகள் பட்டியலில் இடம்பெற துடித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் உக்ரைன் தனது முடிவில் உறுதியாக இருந்தது.

இந்நிலையில் தான் உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்வரி மாதம் 24ல் ரஷ்யா போர் தொடுக்க துவங்கியது. தற்போது இந்த போர் 3வது ஆண்டை நெருங்கி வருகிறது. உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரைனும், ரஷ்யா படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் போக்கால் இன்னும் ‛எண்ட் கார்டு' போட முடியாத நிலை உள்ளது. மேலும் உக்ரைனுக்கு, அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இதுவும் உக்ரைன் மீதான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கைவிடாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார். குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு 2025 ஜனவரி 20ல் அமெரிக்க அதிபராக செயல்பட உள்ளார். அவர் இருநாடுகளுக்கு இடையேயான போர் மற்றும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் உலகளவில் பெரியஅளவில் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் ரஷ்யா - உக்ரைன் போர் என்பது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் தலையீடு காரணமாக இந்த போர் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனை தற்போது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உறுதி செய்துள்ளார். உக்ரைன் நாட்டின் Suspilne எனும் ஊடகத்துக்கு விளாடிமிர் ஜெலன்ஸ்கி அளித்த பேட்டியில் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவருடன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து உரையாடினேன். இந்த வேளையில் போர் நிறுத்தம் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. எங்கள் நாட்டின் நிலைப்பாட்டுக்கு எதிராக நான் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.
அடுத்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன் எங்கள் நாட்டின் மீதான ரஷ்யாவின் போர் முடிவுக்கு வரும். வெள்ளை மாளிகையின் உதவியுடன் போர் நிறுத்தப்படும். பலமான ராணுவத்துடன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக டிரம்ப் உறுதியளித்துள்ளது. நிச்சயம் போர் முடிவுக்கு வரும். ஆனால் போர் முடிவுக்கு வரும் சரியான தேதி என்ன ? என்பது இப்போது தெரியாது'' என்றார்.
இதனால் டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு உடனடியாக ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவின் போர் நடவடிக்கையை சமாளிக்க உக்ரைனுக்கு, அமெரிக்கா தான் தொடர்ந்து உதவி வருகிறது. அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு உக்ரைனுக்கு ஆயுத உதவி, நிதி உதவி வழங்கி வருகிறது. இதனை டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்து இருந்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா, உக்ரைனுக்கு உதவி இருப்பதாக கூறி விமர்சனம் செய்தார். ஆனாலும் கூட தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற அடுத்த 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் உறுதியளித்தார். இருப்பினும் போரை முடிவுக்கு கொண்டு வருவது எப்படி என்பது பற்றி டொனால்ட் டிரம்ப் எதுவும் சொல்லவில்லை.
இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் டொனால்ட் டிரம்புடன் பேச தயாராக இருப்பதாகவும் கூறினார். அதேபோல் டொனால்ட் டிரம்பும், விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை எதிர்க்காலத்தில் நடக்கலாம் என்று கூறியிருந்தார். தற்போது உக்ரைன் அதிபரும் ஜெலன்ஸ்கியும், டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் போர் நிறுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் 2025 ஜனவரி மாதம் 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் அதிபராகும் காலத்தை அனைவரும் எதிர்நோக்கி காத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications