இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ரூ.320 கொடுத்து காரியம் சாதித்த வால்-மார்ட்! விசாரணையில் அதிர்ச்சி
வாஷிங்டன்: இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வால்-மார்ட் நிறுவனம், இங்குள்ள அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்துள்ளது என்று அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்-மார்ட் பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனம், இந்தியாவில், பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் சேர்ந்து சில்லறை விற்பனை நிலையங்களை தொடங்குவதற்கான முயற்சியில் 2013ம் ஆண்டு, காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்தபோது ஈடுபட்டது.

சில்லரை வணிகம்
பின்னர், அந்தத் திட்டத்தை கைவிட்டு தனியாக விற்பனை நிலையங்களைத் தொடங்குவதென வால்-மார்ட் முடிவு செய்தது. இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் இருக்கும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க அரசு விசாரணை நடத்தியது.

விசாரணையில் அம்பலம்
இந்த விசாரணையின்போது, இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வால்-மார்ட் நிறுவனம் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததும் தெரியவந்தது. அந்த விசாரணை அறிக்கையை மேற்கோள்காட்டி, 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சுங்கத்துறை லஞ்சம்
இந்தியாவின் கஸ்டம்ஸ் அதிகாரிகள் மூலமாக தனது பொருள்களைக் கொண்டு செல்வதற்கு, அடிமட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கு சிறு சிறு தொகைகளாக லஞ்சம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

ரூ.300 முதல் 12 ஆயிரம்வரை
சில அதிகாரிக்கு அதிகளவாக 200 அமெரிக்க டாலரும் (தோராயமாக ரூ.12,000), சில அதிகாரிகளுக்கு வெறும் 5 டாலரும் (ரூ.320) லஞ்சமாக தரப்பட்டுள்ளது. இந்த பணத்தை வாங்கிக்கொண்டு இந்திய கஸ்டம்ஸ் துறையிலுள்ள அதிகாரிகள், வால்-மார்ட் நிறுவனத்துக்கு ஒத்துழைத்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க முடியாது
லஞ்சமாக கொடுத்த தொகைகள் அனைத்தையும் மொத்தமாக சேர்த்தால், பல கோடி ரூபாயை தாண்டுகிறது. இருப்பினும், வால்-மார்ட் நிறுவனம், இந்த லஞ்சத்தால் இதுவரை லாபம் எதையும் ஈட்ட ஆரம்பிக்கவில்லை. எனவே அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ், வால்-மார்ட்டுக்கு அபராதம் விதிக்க முடியாது. லாபம் பெற்றது தெரிந்தால் மட்டுமே அபராதம் விதிக்க முடியும்.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications