உலக வரலாற்றில் இல்லாத மோசமான தாக்குதல்.. குறிவைக்கப்படும் குழந்தைகள்.. உச்சமடையும் சிரியா போர்
சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
Recommended Video

டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். தற்போது அங்கு தற்காலிக தாக்குதல் நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனாலும் இரண்டு படைகளும் தற்போதும் தாக்கிக் கொண்டு இருக்கிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது

நேற்றும்
போர் நிறுத்தம் என்று கூறப்பட்டாலும் நேற்றும் சிரிய ராணுவம் புரட்சி படை தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கவுட்டா என்று பகுதி மீதி தாக்குதல் நடத்தியது. அந்த பகுதிக்கு இந்த போர் நிறுத்த விதி சரிப்பட்டு வராது என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஐநா சபையின் போர் நிறுத்த கோரிக்கைகள் வீணாய் போய் இருக்கிறது.

எவ்வளவு
கடந்த 9 நாள் போரில் இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 393,000 மக்கள் இன்னும் அந்த பகுதிக்குள் சிக்கி இருக்கிறார்கள். 3000 பேர் வரை மோசமான காயங்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குழந்தைகள் பலி
இந்த போரில் குழந்தைகள் தான் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். இதுவரை இறந்தவர்களில் 60 சதவிகிதம் பேர் குழந்தைகள். அதேபோல் காயம் அடைந்ததும் குழந்தைகளே. மேலும் கெமிக்கல் பாம்கள் பயன்படுத்தப்படுவதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டு பக்கமும்
அதேபோல் புரட்சி படைகளும் மோசமான தாக்குதலை நடத்தி இருக்கிறது. அங்கு இருக்கும் அரசு அலுவலகங்களை குறிவைத்து தற்போது தாக்குதல் நடந்து வருகிறது. 85 சதவிகித தலைநகர் பகுதிகள் இதுவரை அழிந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications