அதிகாலையில் எழுந்தாலும், பொறுப்பற்ற மாணவனாக வளர்ந்த ஒபாமா...
வாஷிங்டன்: அதிகாலையில் எழுந்து படித்தாலும் கூட தான் பொறுப்பற்ற மாணவராகவே இருந்ததாக தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
அமெரிக்காவில் டென்னெஸ்கி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிபர் ஒபாமா , அங்கு நிகழ்த்திய உரையில் தனது மாணவப் பருவத்தை குறித்து நினைவு கூர்ந்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-

தாயின் பராமரிப்பு....
என்னுடைய பால்ய பருவத்தில் என்னுடைய தாய் என்னை தனி ஆளாக இருந்து வளர்த்தார். என்னுடைய தாத்தா, பாட்டியின் துணையோடு எங்கள் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டார்.

தாயாரின் கவலை....
6 வயதில் நான் வெளிநாட்டில் வளர்ந்தேன். எனவே படிப்பில் பின் தங்கி விடுவேன் என்ற கவலை எனது தாயாருக்கு இருந்தது. எனவே, அதிகாலை 4.30-5.00 மணிக்கே என்னை தட்டி எழுப்பி படிக்க செய்வார்.

எழுந்திருக்க அடம்....
ஆனால் அது எனக்கு பிடிக்காது. எனவே எழுந்திருக்க அடம் பிடிப்பேன். அதே நேரத்தில் 8 வயதான போது அதிகாலை 4 மணிக்கே எழுந்து படித்தேன்.

பொறுப்பில்லாத மாணவன்....
பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்களிடம் பணம் இல்லாததால் அரசின் கல்வி உதவி தொகை மூலமே படிக்க முடிந்தது. படிக்கும் போது சில நல்ல பழக்க வழக்கங்களை கடை பிடித்தாலும் எனது பள்ளிப்பருவம் முழுவதும் பொறுப்பில்லாத மாணவனாகத்தான் இருந்தேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications