Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனா எடுத்த பெரிய முடிவு.. அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு புதிதாக சூப்பர் சலுகைகள்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: உலகின் மிகப்பெரிய பரப்பளவை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனா, மக்கள் தொகையில் அண்மைக் காலம் வரை முதலிடத்தில் இருந்தது. ஆனால் அந்த இடத்தை இந்தியாவிடம் பறிகொடுத்தது. ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சீனாவை ஆளும் இடதுசாரி அரசின் கொள்கையால் இந்த மாற்றம் நடந்தது. ஆனால் அந்த கொள்கையை தளர்த்திய சீனா, இப்போது அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு புதிய சலுகைகளை வாரி வழங்கி உள்ளது.

ஒரு காலத்தில் எவை எல்லாம் சரி என்று நினைத்தார்களோ.. இன்று அவை தவறாக மாறி வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் தான் வறுமைக்கு காரணம் என்று உணர்ந்த அரசுகள். மக்கள் தொகை பெருக்கத்தை வெகுவாக கட்டுப்படுத்தின. ஆனால் அதன் விளைவுகள் வேறு மாதிரி ஏற்பட்டு வருகிறது. முதியோர்கள் அதிகமாகவும், இளைஞர்கள் இல்லாத நிலையும் ஏற்பட தொடங்கியது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. பாலின சமநிலையில் மட்டுமல்ல.. பல நாடுகளில் மக்கள் தொகை பெருக்கமும் கடுமையாக சரிவினை சந்தித்துள்ளது. உதாரணமாக சீனா, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டில் மக்கள் தொகை சரிந்து வருவதால் கவலையில் உள்ளன.

world china population

கடந்த சில ஆண்டுகள் வரை, மக்கள்தொகையில் சீனா உலகிலேயே முதலிடத்தில் இருந்தது. அந்த இடத்தை இந்தியாவிடம் சில ஆண்டுக்கு முன்பு பறிகொடுத்துள்ளது. சீனாவை ஆளும் கம்யூனிஸ்டு கட்சி பின்பற்றிய 'ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும்' என்ற கொள்கையால் நிலைமை ஏற்பட்டது. அதனால், மக்கள்தொகை பெரிய அளவில் சரிந்தது. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு அந்த கொள்கையை சீனா அதிரடியாக ரத்து செய்தது. 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதித்தது. அதன்பிறகும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்ல்லை. இதனால் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தது. சீனாவின் தற்போதைய மக்கள்தொகை 140 கோடியாக உள்ளது. இவ்வளவு மக்கள் தொகை இருந்தாலும் இதில் பெரிய அளவில் பாலின விகிதம் குறைந்துள்ளது. முதியோர் இளைஞர்கள் விகிதம் கடுமையாக மாறி உள்ளது.

அதாவது சீனாவில் முதியோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 140 கோடி மக்கள் தொகையில், 65 வயதை தாண்டியவர்கள் 14 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் ஆவர். இதில் 60 வயதை கடந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 30 கோடி என்று சீன அரசு வெளியிட்ட புள்ளி விவரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதியோர்களின் எண்ணிக்கை 2035-ம் ஆண்டுக்குள் 40 கோடியே தாண்டும் என்றும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதேபோல் 2050-ம் ஆண்டுக்குள் 50 கோடியை எட்டும் என்றும் சீன அரசு கணித்துள்ளது.

ஏற்கனவே சீனாவில் குழந்தை பிறப்பு குறைந்து விட்டதால், சீனா முழுவதும் மழலையர் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகள், முதியோர் இல்லங்களாகவும் மாற்றப்படும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், குழந்தை பிறப்பு சரிவை கட்டுப்படுத்தி, மக்கள்தொகையை அதிகரிக்க சீனா பல்வேறு சலுகைகளை இப்போது அறிவித்து வருகிறது.

சீனாவில் இடதுசாரி அரசின் அமைச்சரவை புதிதாக சில சலுகைகளுடன் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதிக குழந்தைகளை தம்பதிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு 13 சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெற்றோருக்கு குழந்தைப்பேறு மானியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு வீட்டு வசதி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்பான சலுகைகள் அளிக்கப்படும் என்றும் வருமானவரி சலுகைகள் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அனுபவித்து வரும் ஊரக இடம்பெயர் தொழிலாளர்களுக்கு பேறுகால காப்பீட்டு திட்டமும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சீனாவில் பேறுகால விடுமுறை, குழந்தை பராமரிப்பு விடுமுறை தொடர்பான கொள்கைகளை சரியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+