"நட்பு நாடு.." உள்ளே வந்த சீன உளவு கப்பல்.. கூலாக விளக்கம் தந்த மாலத்தீவு.. அப்போ இந்தியா? பகீர்
மாலத்தீவு: சீன கப்பல் திடீரென மாலத்தீவுக்குச் சென்றுள்ளது இந்தியப் பெருங்கடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக மாலத்தீவு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் கடந்த சில காலமாக மோதல் தொடர்ந்து கொண்டே வருகிறது. மாலத்தீவில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முய்ஸு சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்.

இதன் காரணமாகவே அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவரது அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடி குறித்து கருத்துகளைக் கூறியிருந்தார்.
மாலத்தீவு: இதற்கிடையே மாலத்தீவில் உள்ள இந்தியப் படைகளும் வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு கேட்டுக் கொண்டுள்ளார். இதுவும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைப் பாதித்தது..
இந்தச் சூழலில் புவிசார் அரசியலில் முக்கிய நாடான மாலத்தீவுக்குச் சீனாவின் சியாங் யாங் ஹாங் 3 சென்றுள்ளது. இதைச் சீனா சாதாரண ஆய்வு கப்பல் என்று சொல்கிறது. இருப்பினும், இதற்கு உளவு பார்க்கும் திறன்கள் இருப்பதாக உலக நாடுகள் கூறுகின்றனர். மாலத்தீவில் இருந்தபடி இந்தியாவைச் சீனா எளிதாக உளவு பார்க்க முடியும் என்பதாலேயே இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
சீனா: இதற்கிடையே சீன உளவு கப்பலான சியாங் யாங் ஹாங் 3 மாலத்தீவுக்கு வந்துள்ளதை அந்நாட்டுக் கப்பல் துறை உறுதி செய்துள்ளது. மேலும், அந்நாட்டு அரசு இது தொடர்பாக சில முக்கிய தகவல்களையும் பகிர்ந்துள்ளது.
நோட் பண்ணுங்க: கப்பல் ஊழியர்களைச் சுழற்சி முறையில் பணியில் அமர்த்துவது, எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட விஷயங்களுக்காகச் சீனா முறையாகக் கோரிக்கை விடுத்ததாக மாலத்தீவு தெரிவித்துள்ளது. எப்போதும் நட்பு நாடுகளின் கப்பல்களை வரவேற்கும் இடமாகவே மாலத்தீவு இருந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மாலத்தீவு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "துறைமுகத்திற்கு நுழையத் தேவையான கோரிக்கையைச் சீன அரசு மாலத்தீவு அரசிடம் விடுத்தது. அதன் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு தான் இலங்கையில் இதேபோல சீனா உளவு கப்பல் வந்தது. இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் சீன கப்பல் கடந்த ஆண்டு வந்தது. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு சீனா உறவு: கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான். மாலத்தீவு அதிபர் முய்ஸு சமீபத்தில் தான் சீனாவுக்குச் சென்று திரும்பினார். இந்தியப் பெருங்கடலில் அதன் இருப்பை அதிகரிக்க மாலத்தீவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தச் சீனா திட்டம் போடுகிறது. அதற்கான துருப்புச்சீட்டாக மாலத்தீவைச் சீனா பயன்படுத்துகிறது. சீனாவுக்குச் செல்லும் எண்ணெய்யில் சுமார் 80 சதவிகிதம் மாலத்தீவு அருகே தான் செல்கிறது. இதன் காரணமாகவே மாலத்தீவைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரச் சீனா விரும்புகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications