பாஸ்டன், பாரீஸ் இப்போ பிரஸ்ஸல்ஸ்: தீவிரவாத தாக்குதல்கள் நடத்திய சகோதரர்கள்
பிரஸ்ஸல்ஸ்: பாஸ்டன் மாரத்தான் தாக்குதல், சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதலை போன்று பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய தாக்குதல்களையும் நடத்தியது சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜாவென்டம் விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதையடுத்து மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது.
இந்த சம்பவங்களில் 34 பேர் பலியாகினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சகோதரர்கள்
விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது பக்ராவுய் எல் காலித் மற்றும் இப்ராஹிம் எல் பக்ராவுய் என்ற சகோதரர்கள் என போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். சிறு சிறு குற்றம் செய்து வந்த அவர்கள் தீவிரவாத தாக்குதல் நடத்துவார்கள் என்பது போலீசார் எதிர்பார்க்கவில்லையாம்.

விமான நிலையம்
விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த பக்ராவுய் சகோதரர்களுடன் மேலும் ஒருவர் வந்துள்ளார். ஆனால் அவர் கொண்டு வந்த குண்டு வெடிக்கவில்லை. தாக்குதல்களை அடுத்து விமான நிலையம் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் இன்று மூடப்பட்டுள்ளன.

பாஸ்டன்
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தபோது 2 குக்கர் குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் பலியாகினர், 264 பேர் காயம் அடைந்தனர். அந்த தாக்குதல்களை நடத்தியது செசன்யாவை சேர்ந்த டமர்லான் மற்றும் ஜோகர் சார்னேவ் சகோதரர்கள். அதில் டமர்லன் போலீசார் சுட்டதில் பலியானார், ஜோகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சார்லி ஹெப்டோ
கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து கண் மூடித்தனமாக சுட்டு 11 பேரை கொலை செய்ததும் சகோதரரர்கள் தான். அவர்களின் பெயர் சயித் குவாச்சி, ஷெரிப் குவாச்சி ஆகும்.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications