சுடுவதற்கு முன்பு கடைசி நிமிடங்களில் ஆர்லான்டோ கொலையாளி செய்தது என்ன? பேஸ்புக் பதிவால் அம்பலம்!
வாஷிங்டன்: ஆர்லான்டோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர் கிளப்பில் துப்பாக்கி சூடு நடத்தி 49 பேரை கொலை செய்த உமர் மதீன் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்.
அவர் தாக்குதலுக்கு முன்பாக பேஸ்புக்கில் போட்ட பதிவுகளை வைத்து பார்க்கும்போது, ஓரினச்சேர்க்கையாளர்களை விட அமெரிக்கா மீதே அதிக கோபம் இருந்திருப்பது தெரியவந்துள்ளதாம்.
ஓரினச்சேர்க்கையாளர்களை கண்டால் உமருக்கு பிடிக்காது என்று அவரது தந்தை சித்திக் பேட்டியளித்திருந்த நிலையில், உமரே ஒரு ஓரினச்சேர்க்கையாளர்தான் என்று அவரது முன்னாள் மனைவி தெரிவித்திருந்தார்.

குழப்பம்
எனவே, கொலைக்கான காரணம் என்ன என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்ற நிலையில், அந்த அமைப்பால் மூளைச் சலவை செய்யப்பட்டுதான் உமர் மதீன் தாக்குதல் நடத்தியிருக்க கூடும் என்ற சந்தேகம் அமெரிக்க புலன்விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக் பதிவு
அதிகாரிகளின் சந்தேகத்தை உறுதி செய்யும்வகையில் மற்றொரு ஆதாரம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. உமர் மதீனின் பேஸ்புக் பதிவுகளை சோதித்து பார்த்தபோது இந்த தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்கா மீது கோபம்
துப்பாக்கி சூடு நடத்த சில மணித்துளிகள் முன்புவரை பேஸ்புக்கில் உமர் மதீன் பிசியாக இருந்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளை அமெரிக்கா கொன்று குவித்துவருவதாக அவர் பேஸ்புக்கில் கோபத்தில் கருத்துக்களை கூறியுள்ளார்.

வெறியேற்றினார்
இதுதொடர்பாகவே அவர் கூகுளில் நிறைய சர்ச் செய்தும் வந்துள்ளார். மேற்கத்திய நாடுகள் மீது கடுமையான கருத்துக்களை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இப்படி தன்னையே வெறியேற்றிக்கொண்ட பிறகுதான் தாக்குதல் நடத்தியுள்ளார்.

முழு தகவல்
இந்த விவகாரத்தில், பேஸ்புக் நிறுவன தலைமை அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்கின் உதவியை அமெரிக்க பாதுகாப்பு செனட் குழு நாடியுள்ளது. உமரின் பேஸ்புக் நடவடிக்கைகள் குறித்த முழு தகவலை தங்களுக்கு வழங்குமாறு ஸக்கர்பெர்க்கிற்கு செனட் குழு கடிதம் எழுதியுள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications