சுடுவதற்கு முன்பு கடைசி நிமிடங்களில் ஆர்லான்டோ கொலையாளி செய்தது என்ன? பேஸ்புக் பதிவால் அம்பலம்!
வாஷிங்டன்: ஆர்லான்டோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர் கிளப்பில் துப்பாக்கி சூடு நடத்தி 49 பேரை கொலை செய்த உமர் மதீன் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்.
அவர் தாக்குதலுக்கு முன்பாக பேஸ்புக்கில் போட்ட பதிவுகளை வைத்து பார்க்கும்போது, ஓரினச்சேர்க்கையாளர்களை விட அமெரிக்கா மீதே அதிக கோபம் இருந்திருப்பது தெரியவந்துள்ளதாம்.
ஓரினச்சேர்க்கையாளர்களை கண்டால் உமருக்கு பிடிக்காது என்று அவரது தந்தை சித்திக் பேட்டியளித்திருந்த நிலையில், உமரே ஒரு ஓரினச்சேர்க்கையாளர்தான் என்று அவரது முன்னாள் மனைவி தெரிவித்திருந்தார்.

குழப்பம்
எனவே, கொலைக்கான காரணம் என்ன என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்ற நிலையில், அந்த அமைப்பால் மூளைச் சலவை செய்யப்பட்டுதான் உமர் மதீன் தாக்குதல் நடத்தியிருக்க கூடும் என்ற சந்தேகம் அமெரிக்க புலன்விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக் பதிவு
அதிகாரிகளின் சந்தேகத்தை உறுதி செய்யும்வகையில் மற்றொரு ஆதாரம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. உமர் மதீனின் பேஸ்புக் பதிவுகளை சோதித்து பார்த்தபோது இந்த தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்கா மீது கோபம்
துப்பாக்கி சூடு நடத்த சில மணித்துளிகள் முன்புவரை பேஸ்புக்கில் உமர் மதீன் பிசியாக இருந்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளை அமெரிக்கா கொன்று குவித்துவருவதாக அவர் பேஸ்புக்கில் கோபத்தில் கருத்துக்களை கூறியுள்ளார்.

வெறியேற்றினார்
இதுதொடர்பாகவே அவர் கூகுளில் நிறைய சர்ச் செய்தும் வந்துள்ளார். மேற்கத்திய நாடுகள் மீது கடுமையான கருத்துக்களை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இப்படி தன்னையே வெறியேற்றிக்கொண்ட பிறகுதான் தாக்குதல் நடத்தியுள்ளார்.

முழு தகவல்
இந்த விவகாரத்தில், பேஸ்புக் நிறுவன தலைமை அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்கின் உதவியை அமெரிக்க பாதுகாப்பு செனட் குழு நாடியுள்ளது. உமரின் பேஸ்புக் நடவடிக்கைகள் குறித்த முழு தகவலை தங்களுக்கு வழங்குமாறு ஸக்கர்பெர்க்கிற்கு செனட் குழு கடிதம் எழுதியுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications