வெள்ளை மாளிகைக்குள் ஊடுறுவியவரின் காரில் குவியல் குவியலாக வெடிபொருட்கள் மீட்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி புகுந்த நபரின் காரைப் பரிசோதித்த போலீஸார் அதில் குவியல் குவியலாக வெடிபொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
பிடிபட்டுள்ள அந்த நபரின் பெயர் உமர் கோன்சாலஸ். இவருக்கு 42 வயதாகிறது. இவரால் அதிபருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, உமர் கோன்சாலஸ் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பைத் தாண்டி உள்ளே புகுந்து போது பாதுகாவலர்களிடம் பிடிபட்டார். அப்போது அவரது காரைப் பரிசோதித்த பாதுகாவலர்கள், அதிலிருந்து 800 ரவுண்டுகளுக்குப் பயன்படுத்தக் கூடிய வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
தற்போதைய சம்பவம் நடந்த சமயத்தில் அதிபர் ஒபாமா அங்கு இல்லை. அதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர் அங்கிருந்து போயிருந்தார்.
விசாரணையில், பிடிபட்ட நபர் ஈராக்கைச் சேர்ந்த உமர் கோன்சாலஸ் என்று தெரிய வந்தது. இவர் முன்னாள் ராணுவ வீரரும் ஆவார். இவர் வெள்ளை மாளிகையின் வடக்கு புல் வெளிப் பகுதியைத் தாண்டி , பாதுகாப்பு வேலியை தாண்டி கையில் கத்தியுடன் உள்ளே புகுந்துள்ளார்.
மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஜூலை மாதமும் கூட படு வேகமாகக் காரை ஓட்டி வந்ததாக உமரைப் போலீசார் கைது செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், அப்போது . அவரது காரில் அப்போது துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வாஷிங்டன் நகர மேப்பும் அவரது காரில் அப்போது இருந்துள்ளது.
தொடர்ந்து நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உமர், அதிபரின் உயிரைக் குறி வைத்து வந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை பாதுகாப்பு மறு பரிசீலனைக்கு விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications