அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்!
துபாய்: அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தான் போர் நடக்கிறது. அப்படி இருக்கும் போது அமீரகத்தை ஏன் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. ஈரான் இதுபோல ஏன் செய்கிறது.. சம்பந்தமே இல்லாமல் அமீரகத்தைத் தாக்குவது ஏன் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரில் வளைகுடா நாடான ஐக்கிய அமீரகம் உள்ளே வந்துள்ளது. அமீரகம் இந்த போரில் தாக்குதலில் இறங்கவில்லை என்றாலும் ஈரான் குறிவைத்துத் தாக்கும் முக்கிய நாடாக அமீரகம் மாறியுள்ளது. இந்த மோதல் தீவிரமடைந்ததில் இருந்து, எமிரேட்ஸ் மீது 1,714 ட்ரோன்கள், 334 பாலிஸ்டிக் மற்றும் 13 குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதல்
இதில் ஹோட்டல்கள், சுத்திகரிப்பு ஆலைகள், விமான நிலையங்கள், முக்கிய வணிகப் பகுதிகள் இதில் குறிவைக்கப்பட்டுள்ளன. அமீரகத்திற்கும் இந்த போருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. அப்படியிருக்கும்போது அமீரகத்தை ஈரான் ஏன் இவ்வளவு தீவிரமாகத் தாக்குகிறது என்ற அடிப்படைக் கேள்வி எழுகிறது. அங்கு அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளன என்பதைத் தாண்டி, இதன் பின்னணியில் சிக்கலான பொருளாதாரக் காரணங்கள் உள்ளன.
காரணம்
அமெரிக்காவுக்கும் அமீரகத்திற்கும் இடையே வலுவான பொருளாதார தொடர்பு இருக்கிறது. டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அதிபரானபோது, பெரிய வெளிநாட்டு முதலீடுகளை அவர் நாடியபோது, அமீரமக் மிக பெரியளவில் பங்களித்தது. 2025ல் அமெரிக்கா $5.2 டிரில்லியன் வெளிநாட்டு முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்ற நிலையில், அதில் அமீரகம் மட்டும் $1.4 டிரில்லியன் (27%) கோடி முதலீடு செய்வதாக உறுதியளித்தது. இது மற்ற நாடுகளை (கத்தார் $1.2 டிரில்லியன், ஜப்பான் $1 டிரில்லியன், சவுதி அரேபியா $600 பில்லியன், இந்தியா $500 பில்லியன், தென் கொரியா $450 பில்லியன், பஹ்ரைன் $17 பில்லியன், அயர்லாந்து $6.1 பில்லியன்) விட அதிகமாகும்.
அமெரிக்காவுக்கு செய்துள்ள இந்த முதலீட்டு உறுதிமொழி முதல் காரணம். இதேபோக அமீரகம் தன்னை உலகளாவிய முதலீட்டு மையமாக நிலைநிறுத்த முயல்கிறது. 1000க்கும் மேற்பட்ட வணிக, தொழில்துறை நடவடிக்கைகளில் 100% வெளிநாட்டு உரிமைக்குத் துபாய் அனுமதித்ததால், கடந்த 10 ஆண்டுகளில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அபரிமிதமாக அதிகரித்தன. கடந்த 2018ல் $10.4 பில்லியனில் இருந்து அந்நிய முதலீடு 2021ல் $20.7 பில்லியனாகவும், 2024ல் $45.6 பில்லியனாகவும் உயர்ந்துள்ளதை உலக வங்கி டேட்டா காட்டுகிறது.. 2024ல் மேற்காசியாவுக்கு வந்த முதலீடுகளில் 56% அமீரகத்திற்கே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீடுகள்
மேலும், பொதுவாகவே மத்திய கிழக்கில் அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற நாடுகளில் அரசியல் நிலையாக இருக்கும். அங்கு பாலிசிக்கள் சட்டென மாறாது. இதனால் முதலீட்டுக்கு உகந்த மற்றும் பாதுகாப்பான இடமாக இவை கருதப்படுகின்றன. அதுவும் குறிப்பாக அமீரகம் மிகவும் ஸ்திரத்தன்மை கொண்ட நாடாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே துபாய், அபுதாபி ஆகியவை முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
ஈரானின் இலக்காக அமீரகம் மாற இவையே பிரதான காரணங்களாக உள்ளன. அமீரகத்தைத் தாக்குவதன் மூலம், ஈரான் அமெரிக்காவை நேரடியாகத் தாக்காமல், அதன் முக்கியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது அமெரிக்கா வெகு தொலைவில் இருப்பதால் அதை நேரடியாகத் தாக்க முடியாது. ஆனால், அமீரகத்தைத் தாக்குவதன் மூலம் அமெரிக்க மற்றும் அமெரிக்கர்களின் பொருளாதாரத்தை முதலீட்டைப் பாதிக்க முடியும். இதை உணர்ந்தே ஈரான் அமீரகம் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
நேரடி அடி!
சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் மூலம் பல ஆண்டுகளாக வளைகுடாப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை அமீரகம் கட்டமைத்து வந்தது. அந்த நம்பிக்கையையும் பிளவுபடுத்த ஈரான் முயல்கிறது. இந்த ஒவ்வொரு தாக்குதலும் அமீரகம் உருவாக்கிய பிம்பத்திற்கும், அதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் சூழலியலுக்கும் விழும் அடியாகும்.
-
முதுகில் குத்திய பாகிஸ்தான்.. ஈரானுக்கு எதிராக சவுதி அரேபியா-வில் செய்த வேலை.. முதல் ராணுவ ஆக்ஷன்! -
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
இஸ்ரேல் மிரட்டல்.. அமெரிக்காவின் 3 மணிநேர கெடு.. உச்சக்கட்ட பரபரப்பில் ஈரான்..! -
போரால் முடியாததை பேச்சுவார்த்தையில் கேட்குது அமெரிக்கா.. எப்படி சம்மதிக்க முடியும்.. ஈரான் விளக்கம் -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
நேக்கா 2 கப்பலை வெளியேற்றிய ஈரான்.. ஹார்முஸ்-ல் தவிக்கும் 800 கப்பல்.. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அச்சம்! -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன? -
அதிபர் பதவியை இழக்கும் டிரம்ப்? களத்தில் இறங்கிய அந்த 70 பேர் + மாஜி அமெரிக்க உளவு துறை தலைவர்! -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி -
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை ரத்தகளறி! தங்கம் - பங்குகள் வீழ்ச்சி, எண்ணெய் உயர்வு?












Click it and Unblock the Notifications