இந்த விமான நிலையத்தில் ஓடிக்கிட்டே இருக்கலாம்!
டோக்கியோ: ஜப்பானில் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளதையொட்டி நரிதா சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்துள்ளனர்.
வரும் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடக்க உள்ளது. இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நரிதா சர்வதேச விமான நிலையித்தில் புதிதாக ஒரு முனையத்தை திறந்துள்ளனர்.

விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பது எல்லாம் ஒரு பெரிய செய்தியா என்று கேட்டால் ஆமாம் என்று தான் கூற வேண்டும். காரணம் அந்த முனையத்தில் உள்ள பாதைகள் ஓட்டப்பந்தய டிராக் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதையை ரப்பரை வைத்து டிராக் போன்று செய்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடைபெற உள்ளதை குறிக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இந்த முனையத்தை அமைக்க வழக்கமாக ஆகும் செலவை விட பாதி தான் செலவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் விமான பயணம் அளிக்கும் நிறுவனங்களின் விமானங்களுக்காகவே இந்த முனையம் திறக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஒலிம்பிக் போட்டிகளை மனதில் வைத்து இந்த முனையத்தை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications