"கட்டுப்படுத்த முடியல.." திடீரென தனது ஆணுறுப்பையே வெட்டி வீசிய பாதிரியார்.. பின்னணி என்ன! பகீர்
செக் குடியரசு: செக் குடியரசு நாட்டில் பாதிரியார் ஒருவர் திடீரென தனது ஆணுறுப்பை வெட்டி வீசிய பகீர் சம்பவம் நடந்துள்ளது.
செக் குடியரசு நாட்டில் உள்ள செஸ்கோபுடெஜோவிக் என்ற பகுதியில் மிகவும் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கே பாதிரியார் ஒருவர் சின்ன விஷயத்திற்கு எடுத்து மிகப் பெரிய முடிவு அவரது உயிரையே ஆபத்தில் தள்ளியுள்ளது.

அந்த பாதிரியார் தனது பிறப்புறுப்பை அவரே கத்தியால் வெட்டியுள்ளார். அவர் எதற்காக இப்படி அவரது பிறப்புறுப்பை அவரே வெட்டினார். இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பாதிரியார்: கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த செஸ்கோபுடெஜோவிக் நகரில் மத கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தக் கூட்டத்தில் அந்த பாதிரியாரும் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. இருப்பினும், அவர் சொன்ன நேரத்தில் வரவில்லை. அந்த பாதிரியாருக்காகக் கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் என்று காத்திருந்துள்ளனர். இருப்பினும், நேரம் தான் சென்றதோ தவிர அவர் கூட்டத்திற்கு வரவே இல்லை. அந்த பாதிரியார் இதுவரை இப்படி கூட்டத்திற்கு வருவதாகச் சொல்லிவிட்டு வராமல் இருந்ததே இல்லை.
இதனால் சந்தேகமடைந்த மக்கள் இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த பாதிரியார் வீட்டிற்குச் சென்ற போது அங்கே அவர்கள் கண்ட காட்சியை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. அந்த பாதிரியார் சுயநினைவு இல்லாத நிலையில் மீட்கப்பட்டார். அவரே தனது பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். இதனால் அவரது பிறப்புறுப்பு பகுதியில் மிக மோசமான மற்றும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உயிருக்கே ஆபத்து: இதையடுத்து உடனடியாக இது குறித்து மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவர்கள் அந்த பாதிரியார் உடலைப் பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவரது காயங்களுக்கு மிக மோசமாக இருந்தது தெரிய வந்தது. இதனால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்ததால் மருத்துவர்கள் அவரை மயக்க நிலைக்கு எடுத்துச் சென்றனர். மேலும், அடுத்த 10 நாட்களுக்கு அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நல்ல இருந்த பாதிரியார் ஏன் திடீரென இப்படியொரு முடிவை எடுத்தார் என்பதே அனைவருக்குமான கேள்வியாக இருந்தது. இதற்கான காரணத்தை மருத்துவர்கள் கூறும் போது பலருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சிகரமாகவும் இருந்துள்ளது. அந்த பாதிரியார் சிலந்திப்பேன், அதாவது உண்ணி கடியால் அந்த மோசமான முடிவை எடுத்து இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
என்ன நடந்தது: ஆங்கிலத்தில் டிக் என்று அழைக்கப்படும் இந்த உன்னி கடிப்பதால் சில நேரம் டிக் மூலம் பரவும் என்செபாலிடிஸ் (TBE) என்ற நோய்ப் பாதிப்பு ஏற்படலாம், இந்த டிக் கடி வெறும் வலியை மட்டும் ஏற்படுத்தாது இது உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தி மனநோய்க்குக் கூட வகுக்குமாம்.
உரியச் சிகிச்சை பெறாமல் இருந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம் என்று நமக்கே தெரியாத அளவுக்கு மோசமான நிலை ஏற்படும். இது ஏற்படுத்திய உளவியல் மாற்றங்கள் மற்றும் வலியைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த பாதிரியார் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.
நரம்பு மண்டலம்: அந்த பாதிரியார் உடலைச் சோதனை செய்த போது அவரது உடலில் நரம்பு மண்டலத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. இதன் மூலமாகவே அவருக்கு ஏற்பட்டது இந்த டிபிஇ பாதிப்பை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பாதிரியார் மீது வெளியாட்கள் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். டிக் கடித்தால் அந்த எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
டிக் கடியால் ஏற்படும் இந்த பாதிப்பு முதலில் சில நாடுகளில் மட்டுமே இருந்த நிலையில், இப்போது அது உலகெங்கும் பரவியுள்ளது. எனவே, காடு, வயல் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது முக்கியம்.. மேலும், இதுபோன்ற இடங்களுக்குச் சென்று திரும்பும் போது உடலில் உண்ணி எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உடலில் எதாவது உண்ணி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சரியான நடைமுறை.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications