வங்கதேசத்தில் இந்து பெண்ணுக்கு கொடூரம்.. வெடித்தது மாணவர்கள் போராட்டம்! யூனுஸ்க்கு பெரும் தலைவலி
டாக்கா: வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகம்மது யூனுஸ் பதவியேற்றதில் இருந்தே இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் மத வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதாகவும் அடிக்கடி புகார்கள் எழுந்துவரும் நிலையில், இந்து மத பெண் ஒருவர், உள்ளூர் அரசியல் பிரமுகரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

இந்து மத பெண் பலாத்காரம்
முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அங்கு இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் மத வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதாகவும் அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இந்த நிலையில்தான், வங்கதேசத்தில் இந்து பெண் உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் போராட்டம்
இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வங்கதேச தலைநகரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்காவில் வீதிகளில் இறங்கி பெரிய அளவில் மாணவர்கள் பேரணியாக சென்றனர். போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பிய படி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
குற்றம் செய்தவர்களுக்கு எதிராக உடனடி நேரடி நடவடிக்கை தேவை என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் தற்போது வரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக வங்கதேச தேசிய கட்சியின் நிர்வாகி பசூர் அலி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகம்மது யூனுஸ்க்கு தலைவலி
கடந்த 26 ஆம் தேதி ராமச்சந்திரபூர் பச்கிட்டா கிராமத்தில், இந்து மதத்தை சேர்ந்த 21 வயது பெண்ணை வங்கதேச தேசியவாதக் கட்சியின் உள்ளூர் தலைவர் ஃபசோர் அலி (38) பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் துபாயில் பணியாற்றி வருகிறார்.
அந்த பெண், தனது தந்தை வீட்டிற்கு சென்ற போது, அவரது வீட்டிற்கு சென்ற பசோர் அலி, பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். பெண்ணின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு ஓடிவரவும் பசோர் அலி தப்பி ஓட முயன்று இருக்கிறார். அவரை மடக்கி பிடித்த அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
எனினும் அங்கிருந்து தப்பி ஓடிய பசோர் அலியை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பல்வேறு பிரச்சினைகளில் கையை பிசைந்து கொண்டு இருக்கும் முகம்மது யூனுஸ்க்கு தற்போது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications