துபாயில் கொழுந்து விட்டு எரிந்த தீ: பார்த்ததை நினைத்து பதறும் மக்கள்
துபாய்: துபாயில் உள்ள அட்ரஸ் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
துபாயில் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகிக் கொண்டிருந்தோது வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு அட்ரஸ் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. 63 தளங்கள் கொண்ட கட்டிடத்தின் 20வது தளத்தில் இருக்கும் வீட்டின் திரைச்சீலைகளில் தீப்பிடித்துள்ளது. அந்த தீ அட்ரஸ் ஹோட்டலுக்கும் பரவியுள்ளது.

63 தள கட்டிடம் கொழுந்துவிட்டு எரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக துபாய் அரசு தெரிவித்துள்ளது.
அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பால்கனியில் நின்று தீ விபத்தை நேரில் பார்த்த ப்ரூஸ் செபான்ஸ்கி கூறுகையில்,
அங்கு தீ விபத்து ஏற்பட்ட 9 மணிநேரத்திற்கு பிறகு அந்த கட்டிடத்தின் பாகங்கள் இடிந்து விழுந்த சப்தம் கேட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்ததை பார்த்து பயந்தேன் என்றார்.
ஏதோ சப்தம் கேட்டது. வானவேடிக்கையை விரைவில் துவங்கிவிட்டனர் என்று நினைத்தேன். அதன் பிறகு மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்ததை பார்த்த பிறகே தீ விபத்து பற்றி தெரியும். தீ வேகமாகப் பரவியது என்றார் ஜாக்குலின் ஹர்டாடோ.












Click it and Unblock the Notifications