நகத்தை அழகுபடுத்துவதற்காக குழந்தையை காரில் பூட்டிய தாய் கைது!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவில் நக அலங்காரம் செய்வதற்காக பூட்டிய காருக்குள் குழந்தையை விட்டுவிட்டுச் சென்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
கனெக்டிக்ட் நகரைச் சேர்ந்தவர் ரஷீனா பிரான்சிஸ். இவர் தனது 6 வயது குழந்தையுடன் நக அலங்காரம் செய்வதற்காக சென்றார். நக அலங்காரத்திற்கு குழந்தையையும் கூட அழைத்துச் செல்ல விரும்பாமல் காருக்குள் வைத்து காரைப் பூட்டி விட்டு போய் விட்டார்.
என்ஜினை அணைத்து விட்டிருந்ததால், காருக்குள் ஏற்பட்ட வெப்பத்தால் குழந்தை பாவம் துடித்துப் போய் விட்டது. அந்த குழந்தை அலறி அழுததை தூரத்தில் இருந்து கவனித்த கனெக்டிக்ட் போலீசார் காரை திறந்து குழந்தையை மீட்டனர்.
குழந்தையை காருக்குள் வைத்துப் பூட்டி விட்டுச் சென்ற தாயைக் கண்டுபிடித்த போலீஸார் அவரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications