3 மணி நேர 'ஆர்கஸம்'... கடும் அவதியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்!
அவருக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் டாக்டர்களே சில நிமிடம் குழம்பிப் போய் விட்டார்களாம். பின்னர் ஒரு வழியாக அமைதி சகஜ நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
சியாட்டிலைச் சேர்ந்தவர் லிஸ். இவரும், இவரது காதலர் எரிக்கும், வீட்டில் இருந்தபோது திடீரென லிஸ்ஸுக்கு பாலியல் உணர்வு எழுச்சி ஏற்பட்டுள்ளது. காதலர் உடன் இருந்ததால் அப்படி ஏற்பட்டதாக நினைத்துள்ளார் லிஸ். ஆனால் அது போகப் போக அதிகரித்துள்ளது.
ஒரு கட்டத்தில் அவரால் தாங்க முடியாமல் போனது. என்ன செய்வதென்று தெரியாமல் மேலும் கீழுமாக குதித்தும், கீழே உட்கார்ந்தும், படுத்தும் பலவாறாக உணர்ச்சியை அடக்க முயன்றார் முடியவில்லை.
இதையடுத்து ஒயின் குடித்தும் பார்த்தார். ஒன்றும் பலன் தரவில்லை. கிட்டத்தட்ட 2 மணி நேரம் லிஸ் அவதிப்பட்டுள்ளார். அவரை எப்படி அமைதிப்படுத்துவது என்று தெரியாமல் எரிக்கும் குழம்பித் தவித்தா். இதையடுத்து வேறு வழியி்ல்லாமல் மருத்துவமனைக்குச் செல்ல அவர்கள் முடிவெடுத்து விரைந்தனர்.
மருத்துவமனைக்கு வந்த லிஸ், அங்கு துடித்ததைப் பார்த்த டாக்டர்கள், அவர் ஏதோ பிரவச வேதனையில் துடிப்பதாக முதலில் நினைத்து ஓடி வந்தனர். ஆனால் வந்த பிறகுதான் அவரது பிரச்சினை புரிந்தது.
உடனடியாக அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேர சிகிச்சைக்குப் பின்னர் லிஸ் சகஜ நிலைக்குத் திரும்பினார். பின்னர் தொடர்ந்து அவரை சில மணி நேரம் கண்காணித்த டாக்டர்கள் அதன் பின்னர் டிஸ்சார்ஜ் செய்தனர்.
தனக்கு ஏற்பட்ட அவதியையும், தான் சந்தித்த போராட்டத்தையும், அங்குள்ள ஒரு தொலைக்காட்சிக்கு லிஸ் விவரித்துப் பேட்டியும் கொடுத்துள்ளார்.