மைக்ரோ ஓவனில் வைத்து குழந்தையை எரித்துக் கொன்ற தாய்க்கு 26 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது ஒரு வயதுக் குழந்தையை மைக்ரோ ஓவன் அடுப்பில் வைத்து கொலை செய்த பெண்ணுக்கு கலிபோர்னியா நீதிமன்றம் 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த பெண் காயங் (34). இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது ஒரு வயதுக் குழந்தை மிராபெல்லை மைக்ரோ ஓவன் அடுப்பில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் வேக வைத்தார். இதனால் குழந்தை உடல் வெந்து பரிதாபமாக இறந்தது.

Women Jailed for life for killing her daughter

இதையடுத்து, கைது செய்யப்பட்ட காயங் மீது கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கயாங் சில நாட்களாக மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு அதற்கான சிக்கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் அவரை ஆய்வு செய்த மருத்துவர்கள், குழந்தையை கொலை செய்த போது அதற்கான அறிகுறிகள் அவரிடம் எதுவும் தென்படவில்லை என்று கூறினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் காயங் குற்றவாளி என உறுதி செய்தது.

இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், மிராபெல் தயோ லோ, நான்காவதாக பிறந்தார். குழந்தை அடிக்கடி தொந்தரவு செய்துகொண்டே இருந்ததனால் காயங் அதனை மைக்ரோ ஓவன் அடுப்பில் வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

அதனையடுத்து, அவருக்கு 26 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+