காவல் நிலையத்தில் வைத்து பெண்ணை துகிலுரித்த கொடூரம்! அதுவும் பெண் போலீசே..!
நிர்வாண நடனம் ஆட வைத்த பெண் போலீஸ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
இஸ்லாமாபாத்: போலீஸ் ஸ்டேஷனுக்கு, விசாரணைக்காக அழைத்து வந்த பெண் ஒருவரை, மிரட்டி அவரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக டான்ஸ் ஆட வைத்துள்ளனர்.. இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.. இந்த கொடுமையை செய்ய வைத்ததே, ஒரு பெண் போலீஸ் என்பது மற்றொரு அதிர்ச்சி தகவலாகும்.
பாகிஸ்தானில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன.. இந்த அட்டூழியங்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்தும், கண்டித்தும் எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இப்போது இன்னொரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.. பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் குவெட்டா நகரில், ஒரு குழந்தையை கொன்றுவிட்டார்கள்..

கொலை
அங்கிருக்கும் ஒரு அபார்ட்மென்ட்டில் புகுந்து, மர்மநபர்கள் குழந்தையை கொடூரமாக கொன்றுள்ளனர். இந்த கொலை குறித்த விசாரணையை ஜின்னா டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. இது தொடர்பாக பெண் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் தலைமையிலான பெண் போலீசார் அந்த பெண்ணை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்... அவரிடம் விசாரணையும் ஆரம்பமானது..

நடனம்
அப்போதுதான் திடீரென அந்த பெண்ணின் ஆடையை களைய சொன்னார் பெண் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத்.. இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவும், மிரட்டியே ஆடைகளை களைய வைத்து நிர்வாணமாக்கினர்.. ஒரு பாட்டை ஒலிக்க செய்து, அங்கிருந்தவர்கள் முன்னிலையில் அவரை டான்ஸ் ஆட சொல்லி உள்ளனர்.. நிர்வாணமாக டான்ஸ் ஆடிய நிலையில், அதையும் வீடியோவாக பெண் போலீசார் எடுத்துள்ளனர்.

விசாரணை
இந்த சம்பவம்தான் அங்கு வெடித்து கிளம்பி உள்ளது.. போலீஸ் துணை ஐஜி முகமது அசாருக்கு இது தொடர்பான புகாரும் பறந்தது.. அதிர்ச்சி அடைந்த அவர், நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தார்.. அதன்படியே, விசாரணையில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத், பெண்ணை நிர்வாணமாக்கி டான்ஸ் ஆட வைத்தது உறுதி செய்யப்பட்டது... இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத்தை உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வைத்ததுடன், அவரை பணியில் இருந்தும் நிரந்தரமாக கட்டாய ஓய்வு பெற வைக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி
ஷபானா இர்ஷத்துக்கு உடந்தையாக இருந்த புஷ்ரா அப்சல், ஹூமா பைசல், உஸ்மா நஸ்ரின், பாரா கலீல், சமீனா மன்சூர் ஆகிய 5 பெண் போலீசார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இப்போது, பாதிக்கப்பட்ட பெண் விசாரணை கைதி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்... பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய பெண் போலீசாரே, இப்படி ஒரு அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டது காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
-
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications