2015-ல் ‘ஆர்.டி.டி.எஸ்’ மலேரியா தடுப்பூசி விற்பனைத் தொடக்கம்: கிளைக்ஸோ ஸ்மித்க்ளைன் முடிவு
லண்டன்: மலேரியா தடுப்பூசியான ஆர்.டி.டி.எஸ் வரும் 2015ம் ஆண்டு சந்தையில் விற்பனைக்கு வர இருப்பதாக அதன் தயாரிப்பு நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொசுக்கடி மூலம் பரவக்கூடிய நோயான மலேரியாவால் உலகமக்கள் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் பலியாகி வருகின்றனர். குறிப்பாக வறண்ட பகுதிகளாக விளங்கக்கூடிய ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளில் உள்ள குழந்தைகளிடத்தில் இந்த நோயின் தாக்கத்தினால் ஏற்படும் உயிர்ப்பலி அதிகமாக உள்ளது.
எனவே, இந்நோயினைத் தடுக்கும் தடுப்பு மருந்தினை கண்டறியும் முயற்சியில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் நிறுவனத் தயாரிப்பான ஆர்டிஎஸ்,எஸ் தடுப்பூசியை கடந்த 18 மாதங்களாக சோதனை முயற்சியில் பயன் படுத்திப் பார்த்ததில் சிறுவயதினரிடையே இந்த மருந்தானது இறப்பு விகிதத்தைப் பாதியாகக் குறைத்தது தெரிய வந்தது.
இம்மருந்தின் மூலம் இறப்பு சதவிகிதமும் 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இதன் மூலம் இம்மருந்து மலேரியாவுக்கு எதிராக செயல்படுவது உறுதியாகியுள்ளது.
எனவே, வரும் 2014ம் ஆண்டு கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் தனது ஒழுங்குமுறை விண்ணப்பத்தை ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்திடம் வழங்கத் தீர்மானித்துள்ளது. அதன் பின்னர் விற்பனைக்கான இதன் தயாரிப்பு தொடங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈஎம்ஏயின் அனுமதி கிடைத்த உடன் வரும் 2015 ஆம் ஆண்டு முதல் ஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலக சுகாதாரக் கழகம் இந்தத் தடுப்பூசியை குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications