ஐஎஸ் தீவிரவாதிகள் உங்களைத் தாக்கக் கூடும்... இந்தியாவுக்கு எமிரேட்ஸ் எச்சரிக்கை
அபுதாபி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்வர் கர்காஷ் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் சேர்ந்து பாடுபட வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்களுக்கு எந்த நாடும் விதிவிலக்கு அல்ல.

ஐஎஸ்ஐஎஸ் நம்மை தாக்காது என்று நினைத்தால் அந்த நாட்டை தான் அவர்கள் தாக்குவார்கள். அது இந்தியாவாக இருந்தாலும் சரி, அமீரகமாக இருந்தாலும் சரி.
தீவிரவாதம் என்பது தீவிரவாதம் தான். தீவிரவாதிகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இல்லை. இந்த பகுதி தான் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட முடியாது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்த்து போராட ஒற்றுமை தேவை என்றார்.
அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications