திருப்போரூரில் என்னதான் நடக்கிறது.. அடுத்தடுத்து வெடிக்கும் மர்ம பொருட்கள்.. போலீஸ் தீவிர சோதனை!
மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்
காஞ்சிபுரம்: திருப்போரூர் அருகே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை மர்ம பொருள் வெடித்து, ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று இன்னொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2-வது நாளாக அங்குள்ள மர்ம பொருள் குறித்த சோதனை மிக தீவிரமாக நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்போரூரை அடுத்த மானாமதியை சேர்ந்த இளைஞன் திலீபன். இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்தனர். அதற்காக 5 நண்பர்கள் திலீபனை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கெங்கையம்மன் கோயில் குளத்திற்கு சென்றனர்.

கேக் வெட்டும் சமயத்தில், பக்கத்தில் உள்ள புதரில் ஒரு மர்ம பொருள் இருந்தது. அது என்னவாக இருக்கும் என்று அதை 6 பேரும் எடுத்து பார்த்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அதை திறக்கவே முடியவில்லை. அதனால் உடைத்து பார்க்கலாம் என்று முயற்சி செய்துள்ளதாகவும், அப்போது திடீரென பயங்கரமாக அந்த மர்ம பொருள் வெடித்து சிதறியதாகவும் சொல்லப்பட்டது.
ஏதோ நில அதிர்வு வந்துவிட்டதுபோல அப்படி ஒரு சத்தமாம்! இதனால் அந்த ஊர் மக்கள் பதறி கொண்டு வந்து பார்த்தால், 6 பேரும் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர். அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முற்படும்போது, சூர்யா என்பவர் இறந்துவிட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பிறந்த நாள் கொண்டாட ஆசைப்பட்ட திலீபனும் இன்று உயிரிழந்தார்.
இது குறித்து மாவட்ட எஸ்பி உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்மபொருள் என்னவென்றே தெரியவில்லை. ஒருவித பழுப்பு நிறத்தில் இருந்ததாம். ஆனால் அந்த பாகங்களை வைத்து ஆய்வு நடந்து வருகிறது. பக்கத்தில் குவாரிகள் உள்ளதால், பாறைகளை உடைக்க வெடிபொருள் ஏதாவது இங்கு தவறி வந்ததா என்று தெரியவில்லை.
சம்பவம் நடந்த பகுதிக்கு பக்கத்திலேயே ராணுவ பயிற்சி மையம் உள்ளதால், அங்கிருந்து இந்த வெடிபொருள் வந்து விழுந்ததா என்றும் தெரியவில்லை. இருந்தாலும் மர்ம பொருள் வெடித்ததில் இருந்தே கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அந்த ஊரில் ஒருவித பதற்றமும் நிலவி வருகிறது. இந்த சம்பவம் புதிராக இருக்கிறது என்று டிஐஜி தேன்மொழி சொன்னாலும் தீவிர விசாரணை இன்னமும் நடந்து வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications