மாமல்லபுரம் தர்காவில் சந்தன கூடு திருவிழா! மெரூன் ஜிப்பா, கருப்பு மாஸ்கில் வந்த "பெரியோனே ரஹ்மானே"

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் உள்ள தர்காவில் சந்தன கூடு திருவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

சந்தன கூடு திருவிழா என்பது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு முக்கியமான திருவிழாவாகும். இது பிரசித்தி பெற்ற தர்காக்களில் நடைபெறும். இங்கு கலந்து கொண்டு பல இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்வர். இதற்காக மலர்களை வாங்கிச் செல்வர்.

A R Rahman participated in Nemmeli Santhana Koodu festival

இந்த சந்தன கூடு திருவிழா ஆந்திரா மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் பெரிய தர்கா, நாகூர் தர்கா, சென்னை அண்ணா சாலை உள்ளிட்ட தர்காக்களில் நடைபெறும். இந்த சந்தன கூடு திருவிழா எந்த மாநிலத்தில் நடந்தாலும் அதன் அண்டை மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் செல்வதுண்டு.

இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த 2019, 2020 ஆம் ஆண்டுகளில் கொரோனா தாக்கத்தை அடுத்து பக்தர்கள் குறைந்த அளவில் அனுமதிக்கப்பட்டார்கள். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு முதல் சந்தன கூடு திருவிழா வழக்கம் போல் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலியில் உள்ள தர்காவிலும் சந்தன கூடு திருவிழா நடந்தது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு அமைதியான முறையில் பிரார்த்தனை செய்தார். அவர் தலையில் காவி நிறத்தில் குல்லாவையும் முகத்தில் கருப்பு நிற மாஸ்க்கையும் அணிந்திருந்தார். மேலும் அவர் மெரூன் நிறத்தில் ஷைனிங் ஜிப்பா அணிந்திருந்தார். அமைதியான முறையில் பிரார்த்தனை செய்துவிட்டு வீடு திரும்பினார்.

எந்த விழாவுக்கு சென்றாலும் எளிமையாக இருப்பார். நாகையில் கந்தூரி திருவிழாவின் போது ஆட்டோ ரிக்ஷாவில் வந்து பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+