அரை மணி நேரத்தில் அத்தி வரதர் தரிசனம்.. எப்படி சாத்தியமானது?
Recommended Video

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், அத்தி வரதரை தரிசிக்கும் கூட்டம் நேற்று குறைந்து காணப்பட்டதால், பக்தர்கள் அரை மணி நேரத்தில், சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில், வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் தரிசனம் அளித்து வருகிறார். அத்தி வரதரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் என லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வருகை தருகிறார்கள்.
இந்த நிலையில் விஐபி தரிசன வழியில், பக்தர்களை அழைத்துச் சென்றதில் குளறுபடிகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, விஐபி தரிசன வழியில், செல்வோரை வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள்.

முக்கிய நபர்கள்
இந்நிலையில், நேற்று முன்தினம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால், பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நேற்று காலை முதலே, பொது தரிசனத்தில் சென்றவர்கள், அரை மணி நேரத்தில் சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்ததாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். நேற்றும் விஐபிகள் சிலர் தரிசனத்திற்கு வருவதாக பரவிய தகவலால் பொதுவான பக்தர்கள் அதிகம் பேர் வரவில்லையாம்.

கெடுபிடி
இதேபோல விஐபிகள் செல்லும் வழியில் கெடுபிடி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒருவரிடமே பலரும் பல முறை சிபாரிசு பெற்று விஐபி தரிசனம் வழியாக செல்வதை தடுக்க, யார் மூலம், எத்தனை பேர் தரிசனத்திற்கு அழைத்து செல்கின்றனர் என்று விவரம் சேகரிக்கப்படுகிறது. எனவே, விஐபிகள் வழியிலும் கூட்டம் குறைந்ததாம்.

ஆடிப்பூரம்
மற்றொரு காரணம் ஆடிப்பூரம் ஆகும். இன்று முதல் ஆகஸ்ட் 4ம் தேதிவரை ஆடிப்பூரம் உற்சவம் நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு உற்சவர் புறப்பாடு நடைபெறுகிறது. எனவே, ஆடிப்பூரம் உற்சவம் காணவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நேற்று கூட்டம் குறைவாக இருந்ததாம்.

கோரிக்கைகள்
அத்தி வரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும், பாதுகாப்புக்கு துணை ராணுவத்தினரை வரவழைக்க வேண்டும் என்றும், கோரிக்கைகள் வலுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications