காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பாராயணம், திருமஞ்சனம், பிரசாதம் உள்ளிட்ட நடைமுறைகளை தொடர உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்கள் மூடப்பட்ட நிலையில், அனைத்து கோவில்களும் திறக்கப்படலாம் என கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்துள்ளது.

Chennai HC orders TN government to reply in Kanchipuram Varadharajar temple

ஆனால் இந்த அறிவிப்பிற்கு முரணாக வரதராஜ பெருமாள் கோவிலில் மட்டும் வழக்கமான நடைமுறைகள் அனுமதிக்கப்படவில்லை என சென்னையை சேர்ந்த ஆனந்த தேசிகன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், வரதராஜப் பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம், திருமஞ்சனம், அர்ச்சனை, பிரசாதம், வேத பாராயணம், சடாரி போன்ற வழக்கமான நடைமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இந்த வழிபாடுகளுக்கு அனுமதி அளித்து தனியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மார்கழி தொடங்கவுள்ளதால் கோவிலின் வழக்கமான நடைமுறைகளை தொடரும்படி உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, இந்து சமய அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் ஆகியவை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+