காஞ்சிபுரத்தில் பிரியாணி கடையில் பூத்த கள்ளக்காதல்! கறி வாங்கி வந்த கணவர் கேமராவை பார்த்தால்? ஓ காட்
சென்னை: கள்ளக்காதல் அட்டூழியங்கள் அதிகரித்து வருவதுடன், குடும்ப உறவுகளும் உடைந்து வருகின்றன. கணவனை மனைவி கொல்வதும், மனைவியை கணவன் கொல்வதும் என அட்டகாசங்கள் அதிகரித்துவிட்டன.. இதனால் இவர்களையே நம்பியிருக்கும் குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் துயரமும் நடந்து வருகிறது.. வடமாநிலங்கள் போலவே தமிழகத்திலும், கள்ளக்காதல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையை தந்து வருகிறது.. இதோ காஞ்சிபுரத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது. இதுகுறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ளது மேவலூர் குப்பம்.. இங்கு வசித்து வரும் தம்பதி அரிகிருஷ்ணன் - பவானி.. பிரியாணி கடை வைத்திருக்கிறார் ஹரிகிருஷ்ணன்.. 39 வயதாகும் பவானி, பிரியாணி கடையில் கணவனுக்கு உதவியாக இருந்து வருகிறார்.

பிரியாணி ஆட்டுக்கறி
ஹரிகிருஷ்ணன் பிரியாணி கடைக்கு ஆட்டுக்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க அடிக்கடி வெளியே செல்ல வேண்டி வரும் என்பதால், பவானியை கடையில் விட்டு செல்வது வழக்கமாகும்.. அப்போதுதான் அதே கடையில் வேலை பார்த்த மதன்குமார் என்ற 29 வயது இளைஞருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இது தகாத உறவாக மாறி, இருவரும் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இந்த கள்ளக்காதல் ஹரிகிருஷ்ணனுக்கு தெரியவந்துள்ளது.. இதனால், அந்த கள்ளக்காதல் ஜோடிக்கு தெரியாமல் கடையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வைத்து, கண்காணித்தார். அப்போதுதான், பவானியும், மதன் குமாரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் ஹரிகிருஷ்ணன்..
கள்ளக்காதல் ஜோடி
உடனே மதன்குமாரை இனிமேல் கடைக்கு வரவேண்டாம் என்று சொல்லி நிறுத்திவிட்டார். பிறகு பவானியையும் கடுமையாக கண்டித்தார்..
இதனால் கள்ளக்காதல் ஜோடி ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் திணறியது.. அப்போதுதான் கணவரை கொன்றுவிடுவது என்று பவானி முடிவுக்கு வந்தார்.. இதுகுறித்து மதன்குமாரிடம் பேசினார். இறுதியில், கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து திருவாரூர் பகுதியை சேர்ந்த கூலிப்படையினரை அணுகி ரூ.15 லட்சம் பேரம் பேசி, 2 லட்சம் அட்வான்ஸ் தந்தனர்.
பேரம் பேசிய நபர்கள்
சம்பவத்தன்று, மேவலூர் குப்பம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஹரிகிருஷ்ணனை கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயன்றது.. ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்..
உடனே கூலி படையினர் ஹரிகிருஷ்ணனுக்கு போன்செய்து, "உன்னை கொல்வதற்கு உன் மனைவி ரூ.15 லட்சம் பேரம் பேசி ரூ.2 லட்சம் தந்திருக்கிறார்.. நீ எங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறோம்" என்றனர்..
அரண்ட ஹரிகிருஷ்ணன்
இதைக்கேட்டு அரண்டுபோன ஹரிகிருஷ்ணன் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு ஓடினார்.. தனக்கு நடந்த கொலை முயற்சி குறித்தும் புகார் தந்தார்.. இதையடுத்து, கள்ளக்காதல் ஜோடியை பிடித்து போலீஸ் விசாரித்தது..
அப்போது, கூலிப்படையை ஏவி ஹரிகிருஷ்ணனை கொலை செய்ய முயன்றதை இருவருமே ஒப்புக்கொண்டனர். பிறகு, கூலிப்படையை சேர்ந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ், விஜய், மணிகண்டன் உட்பட கள்ளக்காதல் ஜோடி என மொத்தம் 5 பேரையும் கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.. இந்த சம்பவம் குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தாலும், பெரும் அதிர்ச்சியை காஞ்சிபுரத்தில் ஏற்படுத்தி வருகிறது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications