நாங்கதான் பாடுவோம்.. வெளியே போயா! மாறி மாறி மோதிய வடகலை தென்கலை! மூச்சு விட முடியல.. திணறிய போலீஸ்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
தமிழ்நாட்டில் அவ்வப்போது கோவில்களில் வடகலை, தென்கலை பிரிவினருக்கு இடையில் மோதல் நடப்பது வழக்கும். கோவில் சடங்குகள், பூஜைகளை செய்வதில் மோதல் நடக்கும்.
கோவிலுக்கு உள்ளேயே இவர்கள் கடுமையாக தாக்கிக்கொண்ட சம்பவங்களும் கூட நடந்துள்ளன.

மோதல்
திவ்ய பிரபந்த பாடல்களை வடகலை பிரிவினர் பாட கூடாது என தென்கலை பிரிவினர் தடுத்ததால் கோவிலில் சச்சரவு ஏற்பட்டு சுவாமி வீதி உலா செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இரு பிரிவினரிடையே ஏற்பட்ட சலசலப்பால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் விழா கடந்த 13ஆம் தேதி தொடங்கி இன்று ஐந்தாம் நாள் வரதர் யாளி வாகனத்தில் எழுந்தருளினார்.

என்ன நடந்தது
வீதி உலா செல்லப் புறப்பட்ட போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி வடகலை, தென்கலை பிரிவினர் பாசுரங்களை பாடும் போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றி முதலில் தென்கலை பிரிவினர் ஸ்ரீ சைலேச பாத்ரத்தில் இருந்து இரு வரிகளை பாடினர். பின்னர் வடகலை பிரிவினர் ஸ்ரீ ராமானுஜ தயாபாத்ரத்தில் இருந்து இரு வரிகளை பாடினர். இதனைத் தொடர்ந்து இருவரும் பிரபந்தங்களை சேர்ந்து பாட முற்படும்போது இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.

நாங்கதான் பாடுவோம்
திவ்ய பிரபந்தத்தின் பல்லாண்டு பாடல்களை நாங்கள்தான் பாடுவோம் என தென்கலை பிரிவினர் அடம் பிடித்தனர்.நாங்கதான் பாடுவோம் வெளியே போயா என்று தென்கலை பிரிவினர் அடம் பிடித்தனர். இரண்டு பிரிவினரும் சேர்ந்து திவ்யபிரபந்த பாடலை பாடவேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதை ஏற்றுக்கொள்ளாமல் திவ்விய பாடல்கள் பாடுவதை தென்கலை பிரிவினர் புறக்கணித்தனர்.

தோல்வி
இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்த காவல்துறையினரும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளும் முயற்சித்தனர். அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதில் வயதான பூசாரிகள் சிலர்.. மூச்சு வாங்குவதாக புகார் கொடுக்க.. போலீசாரே.. மூச்சு விட முடியவில்லையாம்.. வெளியே போய் பேசிக்கலாம்.. கூட்டமாக நிற்க வேண்டாம் என்று கூறினர்.

சலசலப்பு
இந்த சம்பவங்கள் அங்கு பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் யாளி வாகனத்தில் பெருமாள் வீதியுலா செல்வது காலதாமதமானது. வரதரை காண வெகு நேரம் காத்துக் கொண்டிருந்த பக்தர்கள் வேதனை அடைந்தனர். முன்னதாக தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகளை வாழ்த்தி பாடினர். பின்னர் வடகலை பிரிவினர் வேதாந்த தேசிகரை வாழ்த்தி பாடினர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications