காஞ்சிபுரம் தொகுதியில் ஜோதி வெங்கடேஷன் போட்டி.. பாஜக கூட்டணியில் வேட்பாளரை அறிவித்த பாமக..
காஞ்சிபுரம்: வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட உள்ளது. இந்நிலையில் தான் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காஞ்சிபுரம் தொகுதியின் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேஷன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.

திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இடையே போட்டி ஏற்பட உள்ளது. இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் காஞ்சிபுரம் தவிர 9 தொகுதிகளுக்கு இன்று காலையில் பாமக வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில் தான் இப்போது காஞ்சிபுரம் தொகுதிக்கான பாமக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். பாமக சார்பில் ஜோதி வெங்கடேஷன் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications